எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, March 22, 2010

விலை ஏற்றத்திற்கு கடத்தல், பதுக்கல் தான் காரணம்: அம்மா குற்றச்சாட்டு


சென்னை:'உணவுப் பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறிக்கொண்டே இருப்பதற்கு, கடத்தல், பதுக்கல் தொழில்களை தி.மு.க., அரசு ஊக்குவிப்பது தான் காரணம்' என, அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:பட்ஜெட்டில் திட்ட மதிப்பீட்டில் உள்ளதை விட, திருத்திய மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை குறைந்திருந்தால், அதை தன்னுடைய அரசின் சாதனையாக கருணாநிதி சொல்வதில் தவறில்லை.திட்ட மதிப்பீட்டை விட திருத்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உயர்ந்திருப்பதை, நடப்பாண்டு திட்ட மதிப்புடன் ஒப்பிட்டு வருவாய் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்குரியது.

இதே போல், 2010-11ம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில் 3,396 கோடி ரூபாய் என்ற வருவாய் பற்றாக் குறை, திருத்திய மதிப்பீட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்பதை சூசகமாக தெரியப்படுத்தி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மைக்கு, இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.கூடிய விரைவில் கருணாநிதியின் இந்தச் சாதனையை பாராட்டி, அவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விலைவாசி அதிகரிக்க ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

இத்திட்டங்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் செயல்படுத்தப்பட்டன. இதற்கும், விலைவாசி உயர்வுக்கும் என்ன சம்பந்தம்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல கருணாநிதியின் விளக்கம் அமைந்திருக்கிறது.ரேஷன் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட் களான அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் எல்லாம் தி.மு.க.,வினரால் கடத்தப்படுகிறது; பதுக்கப்படுகிறது.விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் - ஒழுங்கு சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் உற்பத்தி, நதி நீர் பங்கீடு போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறு, தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment