எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழத்துக்கள்.

அனைவருக்கும் குடியாத்தம்  நகர அ.இ.அ.தி.மு.க சார்பில்  இனிய புத்தாண்டு வாழத்துக்களை அன்புடன் கூறுகிறோம்.இந்த இனிய நாளில் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை முதலமைச்சர் அரியணையில் அமரவைபோம் என்று சபதம் எடுப்போம்.

Thursday, December 30, 2010

மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம்: அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

சென்னை: மின்வெட்டு, விலைவாசி உயர்வு , ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைக்ளுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாலையில் கூடிய அ.இ.அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சரும், அம்மா  பேரவை செயலாளருமான  நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை வாசித்தார்.
சென்னை அருகே உள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவரு வெங்கடாஜலபதி அரண்மனையில் அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் , தலைமைகழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் ., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்க வந்த அம்மா அவர்களுக்கு கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள், பிரசாரயுக்திகள்,குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,மைனாரிட்டி தி.மு.க அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1. 76 லட்சம் கோடி இமாலய ஊழலில் ஈடுபட்டு உலக அளவில தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய மைனாரிட்டி  தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, உரிய வெள்ளநிவாரணம் வழங்காதது, சட்டம் ஒழுங்கின்மை, மீனவர் நலன் காத்திட தவறுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, December 21, 2010

ராஜாவை கைது செய்ய அம்மா வலியுறுத்தல்

சென்னை : ""ராஜாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்,'' என  டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறினர்.
அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளதே?
ராஜாவை கைது செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு உங்கள் கட்சி கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படும் போது உங்களிடம் தெரிவிப்பேன்.
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை:அம்மா அவர்கள் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 13 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையும், கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் அம்மா அவர்கள் நேற்று வழங்கினார்.அண்ணா அறக்கட்டளை சார்பில், கட்சி தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அ,இ.அ.தி. மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. டாக்டர் புரட்ச்த்தலைவி அம்மா அவர்கள் நேற்று மதியம் 1.05 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங், கலை மற்றும் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் 41 மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் தொகையான 13 லட்சத்து 23 ஆயிரத்து 924 ரூபாய் மற்றும் 21 கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, குடும்ப நல நிதியுதவியாக அம்மா அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு அம்மா அவர்கள்  இரு கைகூப்பி வணக்கம் செலுத்தி விட்டு தனது காரில் கிளம்பினார். அ.இ.அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை மொத்தம் 822 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 695 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.