எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 17, 2010

அம்மாவின் தரப்பில் பிரதமரிடம் கோரிக்கை மனு...

இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தரப்பில் பிரதமரிடம் கோரிக்கை மனு:கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஆதார விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க., சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கரும்புக்கு கொள்முதல் விலை குறைவாக இருப்பதாகவும், இதை அதிகரிக்க வேண்டுமென்றும் அ.தி.மு.க., சார்பில், மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரிடம் நேற்று முன்தினம் அ.தி.மு.க., வலியுறுத்தியது.
பிரதமர் மன்மோகன் சிங்கை அ.தி.மு.க., எம்.பி..க்கள் 15 பேர், நேற்று சந்தித்துப் பேசினர். டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. அப்போது, அ.தி.மு.க.,பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  தரப்பில் எழுதப்பட்டிருந்த கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் அளித்தனர்.
அதில், தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை போதாது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் மற்ற மாநிலங்களில் இருப்பதை விட கரும்புக்கு அளிக்கப்படும் ஆதாரவிலை குறைவாக இருப்பதையும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சுட்டிக்காட்டனர். 
எனவே, தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாது மாநில அரசையும் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக, சந்திப்புக்கு பின்னர், நிருபர்களிடம் பேசியபோது தம்பிதுரை மற்றும் மைத்ரேயன் ஆகியோர் தெரிவித்தனர்.


வாழ்த்த வயதில்லை வாங்குகிறோம்...



அம்மாவின் அன்னைகிணங்க ...

கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆனநைகிணங்க சென்னை :மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியின் அவலங்களை விளக்கும் வகையில், மாநிலம் முழுவதும், ஐந்து நாள் தொடர் பொதுக் கூட்டங்களை, அ.தி.மு.க., நடத்துகிறது. அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைனாரிட்டி தி.மு.க., அரசின்  அவலங்களை எடுத்துரைக்கும் பொதுக் கூட்டங்கள், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. "மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. "கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.  

Tuesday, February 16, 2010

மைனாரிட்டி தி .மு.க., ஆட்சியில் சர்க்கரை உற்பத்தி இறங்குமுகம்: அம்மா குற்றச்சாட்டு



சென்னை : "எனது ஆட்சியில் ஏறுமுகத்திலிருந்த சர்க்கரை உற்பத்தி, தி.மு.க., ஆட்சியில் இறங்குமுகத்தில்சென்று கொண்டிருக்கிறது' என, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள் ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டத்தைக் கண்டு பொறுக்க முடியாத கருணாநிதி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். கருணாநிதியின் அறிக்கையை பார்க்கும் போது, "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த...' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. எனது அறிக்கையை முழுமையாக படிக்காமல் கருணாநிதி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மாநில அரசு ஆதார விலை யை அறிவிக்கக் கூடாது என, தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்து தடை ஆணை பெற உதவியாக இருந்தவர் கருணாநிதி.


கடந்த 2004ம் ஆண்டு வரை எனது ஆட்சிக்காலத்தில், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படவில்லை என கூறுவது குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற கதையாக இருக்கிறது. எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, தடை ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்கலாம் என்ற உத்தரவும் சுப்ரீம் கோர்ட்டில் பிறப்பிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலையான 795 ரூபாயுடன், மாநில அரசின் ஆதார விலையான 219 ரூபாயை சேர்த்து, கரும்புக்கு கடன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. வாகன வாடகையை வழங்கவும், ஆலை நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதையெல்லாம் கரும்பு விவசாயிகள் நன்கு அறிவர். இது பொறுக்க முடியாமல், தனியார் ஆலைகளிலே தர முடியுமா, தனியார் ஆலைகளிலே தருவதற்கு அரசு வலியுறுத்துமா என்றெல்லாம் கூறி, திசை திருப்பும் முயற்சியில் ஈடுப்பட்டவர் தான் கருணாநிதி.


குறைவான சர்க்கரை உற்பத்திக்கு, 1996, 2001ம் ஆண்டின் கருணாநிதி ஆட்சியின் தாக்கம் தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 2005, 2006 ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு 21.38 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2006, 2007ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை அளவு 25 லட்சத்து 39 ஆயிரம் டன் ஆகும். எனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கை காரணமாக, சர்க்கரை உற்பத்தி 2006-2007ம் ஆண்டு அதிகரித்து இருக்கிறது. பின், 2007, 2008ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி 16.16 லட்சம் டன்னாகவும் குறைந்து இருக்கிறது. இதிலிருந்து எனது ஆட்சிக்காலத்தில் ஏறுமுகத்தில் இருந்த சர்க்கரை உற்பத்தி, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இறங்கு முகத்தில் சென்று கொண்டிருப்பதை யா ரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.


எனது தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தையும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் எனக்குள்ள ஆதரவையும் வரவேற்பையும் கண்டு, கிலி அடைந்து, இது போன்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். முதல்வர் பதவிக்கே மிகப் பெரிய இழுக்கை ஏற்படுத்தியதுடன் கரும்பு விவசாயிகளையும் ஏமாற்ற முனைந்திருக்கிறார். இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

ஆடம்பரம் வேண்டாம் அம்மா அறிவிப்பு...

அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின் கட்டணம் உயரப் போகிறது என்பன போன்ற செய்திகள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளன.தமிழக மக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும் மக்கள் மனது வைத்தால் மாறும் இந்தச் சூழ்நிலையில் என் பிறந்தநாளன்று ஆடம்பரமான கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்று அதிமுகவினரை கேட்டுக் கொள்கிறேன்.பிறந்தநாளன்று என்னை சந்திப்பதற்காக வருவதை தவிர்த்து ஏழைகளின் வாட்டத்தை சிறிதளவாவது போக்கும் வகையில் அவர்களுக்கு பொருளுதவி,மருத்துவ உதவி,அன்னதானம் ரத்ததானம் போன்ற நற்காரியங்களில் அதிமுகவினர் ஏடுபட்டால் அது எனக்கு மிகுந்த மகிழையைத் தரும்.

Saturday, February 13, 2010

ஆர்பாட்ட படங்கள்...

அம்மாவின் அவசப்பேச்சு....



விழுப்புரம் : கரும்பு டன் ஒன்றிற்கு ஆதார விலையாக 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் விழுப்புரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கைகளில் கரும்புகளுடன் விவசாயிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் குவிந்ததால், விழுப்புரம் நகரம் குலுங்கியது. ""கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால், அந்த ஜூவாலை ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும், கரும்பு டன்னுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று, ஆர்ப்பாட்டத்தில் அம்மா அவர்கள்  ஆவேசமாக பேசினார்.


 நேற்று, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில், காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் அம்மா அவர்கள்  வந்திறங்கினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து அம்மாவை வரவேற்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்ட அம்மா அவர்கள் , ஹெலிபேடு அருகே அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலுக்கு சென்றார்.  10.45க்கு ஆர்ப்பாட்ட இடத்திற்கு காரில் புறப்பட்டார். 11 மணிக்கு ஆர்ப்பாட்ட மேடை அமைக்கப்பட்டிருந்த விழுப்புரம் நகராட்சி மைதானத்தை அடைந்தார்.


விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, தம்பிதுரை, செம்மலை, மாநில நிர்வாகிகள் சுலோச்சனா சம்பத், சின்னசாமி, கடலூர் மாவட்ட செயலர்கள் சம்பத், அருண்மொழித் தேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பகல் 12.20க்கு மீண்டும் ஹெலிகாப்டரில் அம்மா அவர்கள்  புறப்பட்டார்.

கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால்...? ""கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால் அந்த ஜூவாலை ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும்,'' என்று, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவசமாக  பேசினார்.


கரும்பு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அம்மா அவர்கள் பேசியதாவது: கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு வழங்க மறுக்கிறது. இதனால், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடியே தமிழகத்தில் கேள்விக் குறியாகி உள்ளது. இதன் விளைவாக, சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு சர்க்கரை விலை விஷம் போல உயர்ந்து கொண்டுள்ளது. 1996ம் ஆண்டு தேர்தலுக்கு முன், கரும்பு டன் 1,000 ரூபாய் விலை வழங்கப்படும் என்று கருணாநிதி வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. கரும்புக்கு மாநில அளவில் ஆதார விலையை அறிவிக்கக் கூடாது என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து தடை ஆணை பெற்றது.


நான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, எனது முயற்சியால் தமிழக அரசு தலைமை வக்கீலை சுப்ரீம் கோர்ட்டில் வாதாட செய்து, மாநில அரசு ஆதார விலையை அறிவிக்கலாம் என்ற ஆணை பெறப்பட்டது. கடந்த 2005-06ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்திற்கு ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்த, 795 ரூபாயுடன் மாநில அரசின் ஆதார விலையாக 219 ரூபாயும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். வாகன வாடகையை அந்தந்த ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதன் முதலாக உத்தரவு பிறப்பித்தது எனது ஆட்சிக் காலத்தில் தான். இதனால், வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை 12 ரூபாய் 50 பைசாவில் இருந்து 14 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு கரும்புக்கான ஆதார விலையை 503 ரூபாய் 40 பைசா என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. ஆனால் தி.மு.க., அரசு 80 ரூபாய் அளவுக்கு மாநில அரசின் ஆதார விலையை குறைத்துள்ளது. எனது ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 219 ரூபாயை 139 ரூபாயாக குறைத்தவர் கருணாநிதி தான்.


மைனாரிட்டி தி.மு.க., அரசின் இதுபோன்ற விவசாய விரோத நடவடிக்கைகள் காரணமாகவும், கூலி உயர்வு, விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு, கடுமையான மின்வெட்டு, போக்குவரத்து செலவு உயர்வு போன்றவை காரணமாகவும் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2005-2006ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 21.38 லட்சம் டன்னாக இருந்தது. 2008-09ல் 16.16 லட்சம் டன்னாக குறைந் துள்ளது கரும்பு விவசாயிகளின் மனநிலையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. தற்போது சர்க்கரை விலை 44 ரூபாய் உயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கரும்புக்கு கூடுதல் ஆதார விலை தரப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் கரும்புக்கு 2,100 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கரும்புக்கான ஆதார விலை பிரச்னையில் மாநில அரசு தலையிடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டபோது கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்த இயக்கம் அ.தி.மு.க., தான். அதன் விளைவாக அந்த உத்தரவையே மத்திய அரசு வாபஸ் பெற்றது. விளைச்சல் குறைவில்லாமல் இருந்தால் தான் விலைவாசி கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக கடத்தல், பதுக்கல் போன்றவை தான் மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியில் கொடிக் கட்டி பறக்கிறது.


நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில்,மைனாரிட்டி  தி.மு.க., அரசின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எவ்வளவோ சிரமப்பட்டு, கடன் வாங்கி, நகைகளை விற்று, கரும்பு சாகுபடி செய்து விளைந்த கரும்புகளை வெட்டுவதற்குரிய ஆணையை, உரிய காலத்தில் வழங்கவில்லை.மைனாரிட்டி  தி.மு.க, அரசு, கரும்பு விவசாயிகளை பழிவாங்கி உள்ளது. கரும்பை வெட்ட முடியாமல் தீ வைத்து விவசாயிகள் கொளுத்தி உள்ளனர். அப்போது, கரும்பு விவசாயிகள் எப்படி எல்லாம் வருத்தம், வேதனைப் பட்டு இருப்பர். விவசாயிகளுக்கு கருணாநிதி பதில் கூறியே ஆக வேண்டும். விவசாயிகள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீர் துளிகளும் மைனாரிட்டி  தி.மு.க., அரசின் முடிவு நெருங்கி கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. கரும்பு விவசாயிகளின் வயிறு எரிந்தால் அந்த ஜூவாலை மைனாரிட்டி  தி.மு.க., ஆட்சியாளர்களை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும். எனவே, கரும்பு விவசாயிகளுக்கு நமது முழுமையான ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறுஅம்மா அவர்கள் அவசமாக  பேசினார்.


எம்.ஜி.ஆர்., பாட்டு; அம்மா  அசத்தல்:அம்மா அவர்கள் , பேச்சுக்கு இடையே, விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் எம்.ஜி.ஆர்., பாடிய, "கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி... விவசாயி...' என்ற பாடலை ராகத்துடன் பாடினார். அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் பலத்த கைத்தட்டல் மூலம் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். "கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அறப்போராட்டம் நடத்தும் என்னை பார்த்து கிண்டலாக சிரிக்கின்றனர். தி.மு.க.,வினருக்கு சொல்லிக் கொள்கிறேன்' என்று கூறிய அம்மா அவர்கள்  அடுத்த பாடலை பாடினார்.


"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு... நல்ல தீர்ப்பை மக்கள் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிப்பவர் யார்... அழுபவர் யார்... தெரியும் அப்போது...' என்று ஆவேசமாக பாடினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பல்வேறு கோஷங்களை அம்மா அவர்கள்  எழுப்பினார். அப்போது, "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...' என்ற பாடலை உரக்க கூறினார்.

Thursday, February 11, 2010

மாபெரும் ஆர்ப்பாட்டம்...

அம்மா அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான விலையை உயர்த்தி தர கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் 13.02.10 நாளை விழுப்புரத்த்தில் நடை பெற உள்ளது விவசாய பெருமக்களே வருக தமிழகமே வருக வருக.............................

Wednesday, February 10, 2010

புதுச்சேரி எம்.எல்.எ விடம் அம்மா நலம் விசாரிப்பு.

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி எம்.எல்.ஏ., அன்பழகனிடம், அவரது உடல் நலம் குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அம்மா அவர்கள்  நேற்று விசாரித்தார். சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில், புதுச்சேரி மாநில செயலர் அன்பழகன் எம்.எல்.ஏ., சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் அ.தி.மு.க., பொதுச் செயலாளர்அம்மா  , மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அங்கிருந்த அன்பழகன் குடும்பத்தினரிடம், அம்மா  நலம் விசாரித்தார். 

Wednesday, February 3, 2010