எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழத்துக்கள்.

அனைவருக்கும் குடியாத்தம்  நகர அ.இ.அ.தி.மு.க சார்பில்  இனிய புத்தாண்டு வாழத்துக்களை அன்புடன் கூறுகிறோம்.இந்த இனிய நாளில் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை முதலமைச்சர் அரியணையில் அமரவைபோம் என்று சபதம் எடுப்போம்.

Thursday, December 30, 2010

மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம்: அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

சென்னை: மின்வெட்டு, விலைவாசி உயர்வு , ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைக்ளுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாலையில் கூடிய அ.இ.அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சரும், அம்மா  பேரவை செயலாளருமான  நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை வாசித்தார்.
சென்னை அருகே உள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவரு வெங்கடாஜலபதி அரண்மனையில் அ.இ.அ.தி.மு.க., பொதுக்குழு கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் , தலைமைகழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் ., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்க வந்த அம்மா அவர்களுக்கு கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள், பிரசாரயுக்திகள்,குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,மைனாரிட்டி தி.மு.க அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1. 76 லட்சம் கோடி இமாலய ஊழலில் ஈடுபட்டு உலக அளவில தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய மைனாரிட்டி  தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, உரிய வெள்ளநிவாரணம் வழங்காதது, சட்டம் ஒழுங்கின்மை, மீனவர் நலன் காத்திட தவறுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, December 21, 2010

ராஜாவை கைது செய்ய அம்மா வலியுறுத்தல்

சென்னை : ""ராஜாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்,'' என  டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறினர்.
அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளதே?
ராஜாவை கைது செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு உங்கள் கட்சி கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படும் போது உங்களிடம் தெரிவிப்பேன்.
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை:அம்மா அவர்கள் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 13 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையும், கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் அம்மா அவர்கள் நேற்று வழங்கினார்.அண்ணா அறக்கட்டளை சார்பில், கட்சி தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அ,இ.அ.தி. மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. டாக்டர் புரட்ச்த்தலைவி அம்மா அவர்கள் நேற்று மதியம் 1.05 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங், கலை மற்றும் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் 41 மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் தொகையான 13 லட்சத்து 23 ஆயிரத்து 924 ரூபாய் மற்றும் 21 கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, குடும்ப நல நிதியுதவியாக அம்மா அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு அம்மா அவர்கள்  இரு கைகூப்பி வணக்கம் செலுத்தி விட்டு தனது காரில் கிளம்பினார். அ.இ.அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை மொத்தம் 822 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 695 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, September 21, 2010

அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல்: அம்மா கண்டனம்


அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்த அரசு டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.







அவரது அறிக்கை:மதுரை திருமங்கலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,விலிருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.,வில் இணைந்தனர். திருமங்கலம் ஒன்றியம், பன்னிக்குண்டு கிளை செயலர் கொடிவைரன் உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் சென்ற போது, அவர்களை தி.மு.க., கிளைச் செயலாளர்  செல்லத்துரை தலைமையில் ஒரு வன்முறைக் கும்பல் வழிமறித்து, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த கொடூரத் தாக்குதலில் கொடிவைரன், கட்சி தொண்டர்கள் மாயாண்டி, சிவமணி மற்றும் மூர்த்தி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சென்ற வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையை தொண்டர்கள் அணுகிய போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட அங்குள்ள அரசு டாக்டர்கள் மறுத்து இருக்கின்றனர்.







ரத்தக் காயங்களுடன் வேதனையுடன் நின்றவர்களை, அரசு டாக்டர்கள் ஈவு இரக்கமின்றி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, விரட்டி அடிக்கப் பார்த்தனர். பின் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மிகவும் தாமதமாக கட்சி தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவத் தொழில் என்பது புனிதமான தொழில். விரோதியாக இருந்தால் கூட நோயாளி என்று வந்துவிட்டால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது ஒரு டாக்டரின் கடமை. இதை மறந்து தாங்கள் எடுத்துக் கொண்ட புனித உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக சிகிச்சை அளிக்க அரசு டாக்டர்கள் மறுத்திருப்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய மனிதாபிமான அற்ற செயல்.கட்சி, இனம், மதம், மொழி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி தொழில் தர்மத்தை மீறி, இவ்வாறு இழிவாக நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.







இதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தி.மு.க.,வினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த கொடிவைரன், மாயாண்டி, சிவமணி, மூர்த்தி விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும். மைனாரிட்டி தி.மு.க., அரசு வீழ்ந்து, எம்.ஜி.ஆர்., ஆட்சி விரைவில் மலர்ந்தவுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், கடமையாற்ற மறுத்த டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.

Saturday, September 18, 2010

பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைக்க அ.இ.அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம்

மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.இ.அதி.மு.க., சார்பில் நாளை திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, டாக்டர் புரட்ச்தலவி அம்மா  அறிவித்துள்ளார்.








அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகித்த ஜவுளித் தொழிலை முற்றிலுமாக முடக்கிய பெருமைக்குரியவர் மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர் கருணாநிதி. கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை, ஊதிய இழப்பை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நூற்பாலைகள் இயங்காத சூழ்நிலை நிலவுகிறது.மத்திய அரசின் தவறான பொருளாதார மற்றும் ஏற்றுமதி கொள்கையால், கடந்த ஓராண்டில் மட்டும் நூலின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்திக்கான செலவு 30 சதவீதம் அதிகரித்து, வங்கதேசம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.







பல பின்னலாடை தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாய சலவைப் பட்டறை தொழிற்சாலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் சென்றடையாத காரணத்தால், இதனுடைய தாக்கம் ஜவுளித் துறையை கடுமையாக பாதித்துள்ளது.அக்டோபர் 1ம் தேதி முதல் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ள செயல், "எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார் போல்' அமைந்துள்ளது என, அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.கருணாநிதிக்கு கடிதம் எழுதியும், மத்திய வர்த்தகம், ஜவுளித் துறை அமைச்சர்களை சந்தித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜவுளித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கு உறுதுணையாக இருக்கும் முதல்வர் கருணாநிதி, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.







கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து, நூல், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழில்களை உள்ளடக்கிய ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்த மைனாரிட்டி தி.மு.க., அரசு, மத்திய ஜவுளித் துறை அமைச்சரை கண்டித்தும், நூல் விலையை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடின்றி உரிய விலையில் நூல் கிடைக்கவும், ஜவுளித் தொழிலை பாதிக்காத வகையில் ஏற்றுமதிக் கொள்கையை மாற்றியமைக்கவும், சாயச் சலவை பட்டறைகளின் பிரச்னைக்கு தீர்வு காணவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், நாளை திருப்பூர் ரயில் நிலையம் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்.

Tuesday, September 14, 2010

எடுக்க வேண்டிய சபதம் என்ன? அம்மா அறிக்கை


"மைனாரிட்டி தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா துரையின் பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும்' என,டாக்டர் புரட்சிதலைவி அம்மா  தெரிவித்துள்ளார்.







அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக தன் வாழ்நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணாதுரை. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, ஒன்றே குலம் ஒருவனே தேவன்' போன்ற அமுத மொழிகள் என்றென்றும் சாகா வரம் பெற்ற அமரத்துவமான போதனைகளாய் இன்றும் வலம் வருகின்றன. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே மறுமலர்ச்சி என்ற தலையாய நோக்கங்களை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த அண்ணாதுரை மக்களோடு மக்களாக வாழ்ந்தார். "என் கடன் பணி செய்து கிடப்பதே' என பொதுத் தொண்டில் பேரார்வம் கொண்டு உழைத்தார்.







தனது பிறந்தநாளை கூட "என்னை இச்சமூகம் மேலும் பணியாற்ற இடும் கட்டளை' என்றே அடக்கத்துடன் அறிவித்தார். அரை நூற்றாண்டு கால தனது அயராத போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியை தமிழக அரசியல் அதிகாரத்தில் இருந்தே அப்புறப்படுத்தி, திராவிட இயக்க ஆட்சிக்கு கால்கோள் நாட்டினார். அநாகரிக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட  கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே அண்ணாதுரையின் 102வது பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும். இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்

Friday, September 10, 2010

மதுரையில் அக்., 18ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : அம்மா அறிவிப்பு


முல்லைப் பெரியாறு பிரச்னை, ரவுடிகள் அட்டகாசம், மின் வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகளை முன்னிறுத்தி, மைனரய் தி.மு.க., அரசை கண்டித்து, அக்டோபர் 18ம் தேதிடாக்டர் புரட்சிதலைவி அம்மா தலைமையில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடக்கிறது.







இது குறித்து அம்மாவின்  அறிக்கை: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. ரவுடிகளின் ஆதிக்கத்தால் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான மின் வெட்டு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போய் விட்டன. மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டது. மீன்பிடித் தொழில் கேள்விக் குறியாகி விட்டது. நூல் விலை காரணமாக ஜவுளித் தொழில் நலிந்து விட்டது. மக்கள் செய்வதறியாது திகைத்து போய் நின்று கொண்டிருக்கின்றனர். "பெரிய ரவுடியாகும் ஆசையில், கொலை செய்தேன்' என, ஒரு கொலையாளி போலீசாரிடம் தெரிவிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.







இப்படி, மக்களின் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் காரணமான தி.மு.க., அரசை கண்டித்து அண்மையில் எனது தலைமையில் கோவை, திருச்சி, ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. "மதுரைக்கு வராதே, வந்தால் கொலை செய்து விடுவேன்' என, தற்போது மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களுக்கு நான் பயந்தவள் இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து, வரும் அக்டோபர் 18ம் தேதி, மதியம் 2:30 மணியளவில், மதுரையில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் அம்மா தெரிவித்துள்ளார்.

Monday, September 6, 2010

தகவல் உரிமை சட்ட நோக்கத்தையே சிதைத்து விட்டனர்

"என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம், தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது' என,  டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.








அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் உரிமை சட்டப்படி, தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட்ட போது, கருணாநிதி தனக்கு பதிலாக, அன்பழகனை அனுப்பி வைத்ததாகவும், ஆனால், தற்போது நான் எனது சார்பில் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. நான் முதல்வராக இருந்த போது நடந்த கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தான், அன்பழகன் கலந்து கொண்டார்.







தற்போது நடந்த குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில், தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் நான் கோரியிருந்தேன். ஆனால், அரசு அந்த விவரங்களை எனக்கு அளிக்கவில்லை. எனவே, எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்பதால் தான், அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை.நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமானால், அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருப்பேன். மைனாரிட்டி தி.மு.க., அரசின் பாரபட்சமான நடவடிக்கை தான், நான் பங்கேற்காததற்கு காரணம்.அரசு தரப்பில் தலைமை தகவல் ஆணையரை ஏற்கனவே முடிவு செய்து விட்டு, சம்பிரதாயத்திற்காக என்னை அழைத்தது போல் தான் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.







இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகிறது; இது சர்ச்சைக்கு வழி வகுக்கும் செயல்.வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த குழுவில் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம் இந்த சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது.ஊடகங்கள் மற்றும் தகவல் உரிமை ஆர்வலர்களின் யூகத்திற்கு ஏற்ப, தலைமை தகவல் ஆணையரை நியமித்ததன் மூலம், இந்த நியமனம் ஒளிவு மறைவற்ற முறையில், வெளிப்படையாக நடக்கவில்லை என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார். அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான செயல்.இவ்வாறு அம்மா தெரிவித்துள்ளார்

Sunday, September 5, 2010

மாணவர் மீது தாக்குதல் நடந்தால்... : சும்மா இருக்க மாட்டேன் என்கிறார் அம்மா

"கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, டாக்டர்  புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.




அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, "திருடன், திருடன்' என்ற கூக்குரலைக் கேட்டவுடன், அந்த நபரை உடனடியாக பிடித்துள்ளனர்.அந்த சமயத்தில், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குமரவேலை திருடன் பார்த்தவுடன், "என்னைய்யா என்னை உங்களுக்கு தெரியவில்லையா?' என கேட்டிருக்கிறான். உடனே அந்த தலைமை காவலர் திருடனைப் பிடித்துக் கொடுத்த சட்டக் கல்லூரி மாணவர்களை நோக்கி, "நீங்கள் எல்லாம் யார்?' என கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த மாணவர்கள் "நாங்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்' என பதில் அளித்து, தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தி இருக்கிறார் தலைமைக் காவலர். சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.







திருச்சியில் திருடனுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, புதுக்கோட்டையில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ. இ.அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன் பேசியுள்ளார்.இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், ஒன்றிய தி.மு.க., செயலருமான ராஜு தலைமையில் ஒன்பது பேர், அன்பழகனை ஆயுதங்கள் கொண்டு கொடூரமாகக் தாக்கியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் அன்பழகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுசம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, மைனாரிட்டி தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.

Monday, August 16, 2010

மானாமதுரையில் ஆர்ப்பாட்டம்: அம்மா அறிவிப்பு

 ""மானாமதுரை பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றாததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க., சார்பில் இன்று(17ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்,'' என இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அறிவித்துள்ளார். இது குறித்த அவரின் அறிக்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை, விளையாட்டு மைதான வசதியின்றி, இட நெருக்கடியால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். இதனைப் போக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தையும், பயணிகள் தங்கும் விடுதியையும் வேறு இடத்திற்கு மாற்றி அந்த இடத்தை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணராஜபுரம் தெருவிற்கும் இடையில் பாலம் கட்டுவதாக அரசு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு அவலம் மானாமதுரை தொகுதியில் நிலவுகிறது. வைகை ஆற்றின் கரை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததால், கழிவு நீர் ஆற்றில் கலப்பதாகவும், மானாமதுரை தொகுதியில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். திருபுவனம் பேரூராட்சியில் பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும், சமூக நல நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

திருபுவனம் ஒன்றியத்தில், லாடனேந்தல் முதல் திருப்பாச்சேத்தி வரை செயல்பட்டு வரும் மணல் குவாரியை அகற்றாததால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதிதாக நில சர்வே செய்த பிறகும், ஆவணங்களை ஒப்படைக்காமல், பேரூராட்சி நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. தாட்கோ மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்களில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர். இளையான்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சீரான மின்சாரம் இன்றி இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் மானாமதுரை தொகுதி முழுவதும் எவ்வித மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதே சமயத்தில் மாநகராட்சிக்கு இணையாக குடிநீர், வீட்டு வரி ஆகியவை வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை கண்டித்து, மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில், நாளை(17ம் தேதி) காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 14, 2010

திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் அம்மா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு

""தமிழத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர, முதல்வர் கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக, துரோகங்களை இழைத்துள்ளார்,'' என அ.இ.அ.தி.மு.க., இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , திருச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.

விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் திருட்டால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க., சார்பில்,  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அம்மா  பேசியதாவது:  நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகளாகின்றன.  இதுபோல மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததில்லை.தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு காலம் முடிந்து விட்டது. இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் ஓட்டு போடுவது மக்களின் கையில் உள்ள சிறந்த ஆயுதம்.முதல்வர் கருணாநிதி, உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார். அவரது சொத்துக்கணக்கை  பார்த்தால், கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும். கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, அரசு எதையும் செய்யவில்லை. கேட்டால், மத்திய அரசு மீது பழிசுமத்துகிறார். மத்திய, மாநில ஆட்சியில் இருப்பது தி.மு.க., தான்.மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு, இல்லை என்கிறார்.  கர்நாடகாவை விட, தமிழகத்தில் குறைவு தான் என்கிறார். மின் கட்டண உயர்வு, ஆந்திராவை விட இங்கு குறைவு தான் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தை விலையைக் காட்டி, கருணாநிதி ஏமாற்றுகிறார்.

தமிழக விவசாயத்தை, காவிரியைக் கழித்து விட்டு கணக்கிட முடியாது. மொத்த பாசனத்தில் 85 சதவீதம் காவிரியை நம்பித் தான் உள்ளது. வறண்ட காவிரியை வற்ற வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. 1924ம் ஆண்டு கர்நாடகா - தமிழகத்துக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. 50 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த ஒப்பந்தத்தை, 1974ம் ஆண்டு புதுப்பிக்க தவறி விட்டார் கருணாநிதி. ஒப்பந்தம் காலாவதியாவதை உணர்ந்த கர்நாடகா அரசு, அணைகளைக் கட்டியது. அதை தடுக்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுவே, காவிரி விஷயத்தில் அவர் செய்த முதல் துரோகம்.அதன்பின், இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என 1971ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது, இரண்டாவது துரோகம். 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது மூன்றாவது துரோகம். ஐகோர்ட் உத்தரவின்படி 1990ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் சேர்த்து 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என, 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது நான்காவது துரோகம்.

அதற்குக் காரணம், கர்நாடகாவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான வணிக சம்ராஜ்யங்களை பாதுகாக்க, கர்நாடகாவை விரோதிக்க விரும்பாமல், தமிழக விவசாயிகளின் உரிமைகளை துளியும் கவலையில்லாமல், தாரை வார்த்துள்ளார். நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை, பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.  கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர, கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

இடையில், பல முறை பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அம்மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், காவிரி நீரைக் கேட்கவில்லை. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, காவிரியில் நீர் திறந்து விடக் கேட்டு, கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகே, மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்திருக்காது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு : ஜெயலலிதா சூசகம் : காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு குறித்து ஜெயலலிதா பேசியதாவது:"தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு' என்று நான் சொல்வதற்கு கருணாநிதி கோபம் அடைகிறார். தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி முறையில் ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், சபாநாயகர் தவிர தற்போது தி.மு.க.,விடம் 99 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மை இல்லாத தி.மு.க., தான் அரசு அமைத்து ஆட்சி நடத்துகிறது. இதை எப்படி மெஜாரிட்டி அரசு என்று சொல்லமுடியும்? காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதால் தான் கருணாநிதி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய "பரந்த' மனம் கருணாநிதிக்கு இல்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வினருக்கும் மட்டும் அமைச்சர் பதவிகளை அவர் மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றுக் கொண்டுவிட்டார்.
கருணாநிதியை எப்படி அழைப்பது? திருச்சியில் அம்மா விளக்கம் :  திருச்சியில் அ.இ அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் புரட்சிதலைவி அம்மா பேசியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தியாவில் பெருமை மிக்க மாநிலமாக விளங்கிய தமிழகம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. 1,000 ரூபாய் கொடுக்கிறார்களே என ஏமாந்து ஓட்டு போட்டு விட வேண்டாம். குடும்ப ஆட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆளும் கட்சியை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்காவது எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கேவலம் இங்கு நடந்துள்ளது. 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது என்மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டனர். 12 வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று கருணாநிதியால் போடப்பட்டது. பெங்களுரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்தது கருணாநிதி தான். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வழக்கை நான் தாமதப்படுத்துவதாக கூறி வருகிறார். நான் ஆமாம் என்று சொல்ல வேண்டும், சிறைக்குள் சென்று தண்டனை அனுபவிக்க வேண்டும், தேர்தலில் போட்டியில்லாமல் ஜெயித்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார்.இப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கலாமா? கருணாநிதி பெயரை சொல்லுவதால் வேதனைப்படுகிறாராம்.

கோவையில் அ.இ.அ.தி.மு.க., கூட்டத்தை கண்டு மிரண்டு போய், பிரியாணி, மதுபாட்டில் கொடுத்து கூட்டத்தை கூட்டினார். 30 சதவீத அளவு கூட்டம் கூட அங்கு இல்லை. ஜெயலலிதா என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்தனர். நேரு, இந்திரா, காமராஜர் பெயரை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைக்கிறோம்.ஜெயலலிதா சொல்லும் போது கோபம் வருகிறது. எம்.ஜி.ஆர்., அழைத்த பட்டப்பெயர் சொல்லித் தான் இனி கூப்பிடப்போகிறேன். அது தான் தீயசக்தி. இனி, "திருக்குவளை தீயசக்தி' என்று தான் அழைப்பேன்.இவ்வாறு அம்மா பேசினார்.தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியை கண்டித்து ஜெயலலிதா கண்டன கோஷங்கள் முழங்க, கட்சியினர் அவற்றை திரும்பக் கூறினர்.


கருணாநிதிக்கு புது பெயர் அம்மா சூட்டினார்

 திருச்சியில் நடைபெற்ற அஇஅதிமுக., பொது கூட்டத்தில் பேசிய பொது செயலாளர்டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் முதல்வர் கருணாநிதிக்கு புதுபெயர் சூட்டினார். கூட்டத்தில் அம்மா பேசியதாவது: ஒருவருக்கு பெயர் என்பது மற்றொருவர் தன்னை அழைக்க வேண்டும் என்பதற்காக சூட்டப்படுகிறது. அதன்படி தான் தி.மு.க., கட்சி தலைவரை கருணாநிதி
என்று அழைத்தேன் ஆனால் அப்படி அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதால்
எம்.ஜி.ஆர் சூட்டிய தீயசக்தி என்ற பெயரை சூட்டுவோம்.இனிமேல் அவரை திருக்குவளை தீயசக்தி என்றே அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த அ.இ.அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: கோவையை மிஞ்சியது

திருச்சி: அ.இ.அ.தி.மு.க., நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தால் கோவை நகரம் குலுங்கியது போல், நேற்று திருச்சியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தால் குவிந்த தொண்டர்கள் வெள்ளத்தில் திருச்சி ஸ்தம்பித்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மைனாரிட்டி  தி.மு.க., அரசு மீது சரமாரியான குறறச்சாட்டுகளை அடுக்கினார்.

அ.இ.அ.தி.மு.க., சார்பில், கடந்த மாதம் 13ம் தேதி கோவையில் பல்வேறு பிரச்னையை வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு திரண்ட கூட்டத்தால் கோவை குலுங்கியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆளும் தி.மு.க.,வுக்கு "கிலி'யை ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.  அதே இடத்தில் தி.மு.க., போட்டிக் கூட்டம் நடத்தியது. இதற்கிடையே, திருச்சியில்  கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சிதலைவி அம்மா அறிவித்தார். அதன்படி, பொன்மலை "ஜி' கார்னர் மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டனப் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கார், வேன், பஸ், லாரிகளில் அ.இ.அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். பகல் 11 மணிக்கே கூட்டம் நடந்த மைதானத்துக்கு தொண்டர்கள் சாரை, சாரையாக அணிவகுத்து வரத்துவங்கினர்.

ஆர்ப்பாட்டம் நடந்த மைதானத்துக்கு எதிரே சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க.,வினர் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்தே வந்தனர். மாலை 4 மணிக்கு தான் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்தாலும் மதியம் ஒரு மணிக்கே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் "ஜி' கார்னர் மைதானத்தில் குவியத் துவங்கினர். கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் வாகனம் நிறுத்த இடமில்லாததால், சென்னை - மதுரை நான்குவழிச் சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்தினர். முதலில் 2 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேரம் செல்ல செல்ல பல கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் முதல் பழைய பால் பண்ணை மற்றும் மன்னார்புரம் நால்ரோடு வரை உள்ள நான்குவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் அ.இ.அ.தி.மு.க.,வினர் வந்த வேன், கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலையிலிருந்தே திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் நேற்று மாலை 4.15 மணிக்கு திருச்சி வந்த அம்மா, கூட்டம் நடந்த "ஜி' கார்னர் மைதானத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் கட்சியினரும், மக்களும் அம்மா வந்த வாகனத்தை வரவேற்று, ஆர்ப்பரித்தனர். அ.இ.அ.தி.மு.க., தொண்டர்களுடன் பொதுமக்களும் மைதானம், நான்குவழிச்சாலை, பாலம் என அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிந்தனர்.

 சரியாக 5.25 மணிக்கு அம்மா மேடையேறினார். 5.35 மணிக்கு பேசத் துவங்கிய அவர்,மைனாரிட்டி தி.மு.க., அரசையும், முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.  7.15 மணிக்கு தன் பேச்சை முடித்தார். காவிரி பிரச்சனை, விலைவாசி உயர்வு, மண் கொள்ளை, உள்ளூர் அமைச்சர் நேருவின் நடவடிக்கை, ஹார்லிக்ஸ் கொள்ளை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவரது பேச்சைக் கேட்ட கட்சியினர் பலத்த ஆரவாரம் செய்தனர்.

Friday, August 13, 2010

திருச்சியில் இன்று அம்மா தலைமையில் ஆர்பாட்டம்.


மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து திருச்சியில் அ.இ.அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்திலும், தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலியிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையிலும், புரட்சிதலைவி அம்மா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே நடந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் லக்ச்சகனக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்அம்மா  நேரடியாக கலந்து கொள்வதால் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.இந்நிலையில் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிப்பு, மணல் கொள்ளை, போலி மருந்து, போலி உணவு, போலி டாக்டர், போலி மதிப்பெண் சான்றிதழ், சட்டம், ஒழுங்கு அவல நிலை, விலைவாசி உயர்வுக்கு காரணமான மைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்து, திருச்சியில் இன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கும் அம்மா அவர்கள் , இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான முக்கிய அறிவிப்புகளை அம்மா  வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Wednesday, August 11, 2010

கோவை, திருச்சியையடுத்து... மதுரைக்கு அம்மா , வருகை

மதுரை : கோவை, திருச்சியை அடுத்து மதுரைக்கு அடுத்த மாதம் மத்தியில்(செப்., 18-21) டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் வரவுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர  பொதுச் செயலாளர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆளுங்கட்சியின் குறைகளை பட்டியலிடுகிறார். திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து, மதுரை, நெல்லைக்கு அம்மா  செல்ல திட்டமிட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்., 18 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மைதானத்தை மாநகராட்சி வழக்க மறுத்ததையடுத்து அ.இ. அ.தி.மு.க., ஐகோர்ட்டில் மனு செய்து அனுமதி பெற்றது. இவ்வழக்கில் ஆஜரான முன்னாள் சபாநாயகரும், மூத்த வக்கீலுமான பி.எச். பாண்டியன், இக்கூட்டத்தில் அம்மா , கலந்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டார். செப்., 18 முதல் 21ம் தேதிக்குள்ளாக ஏதாவது ஒரு தேதியில் அம்மா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அ.இ.அ.தி.மு.க., தலைமை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என அ.இ.அ.தி.மு.க., வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.


Monday, August 9, 2010

டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: அம்மா குற்றச்சாட்டு

"வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுமென, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது' என, 
டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் மொத்த வருவாயில், 25 சதவீத வருவாயை ஈட்டித் தரும், 30 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது. எனது ஆட்சி காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் என்பதற்காக, விசாரணையின்றி பணி நீக்கம் போன்ற இன்னல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.பின்னர், லஞ்சம் கொடுத்தால் தான் மீண்டும் வேலை என்ற மோசமான நிலை நிலவுகிறது. ஏழு ஆண்டுகள் பணியாற்றியும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள் விஷயத்தில், எந்த ஒரு தொழிலாளர் நலச் சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு, வரும் 11ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களை அழைத்து பேசாமல், "பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது.மறுபுறம், "வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம்' என தொழிலாளர்களை அச்சுறுத்தி கையெழுத்து வாங்கும் நடவடிக்கைகளிலும், புதிய ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.பணியாளர்களை நேரடியாக சென்று மிரட்டும் நடவடிக்கையில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.மைனாரிட்டி  தி.மு.க., அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் முறையான செயல்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.


Sunday, August 8, 2010

துணைவேந்தரை தாக்கிய தி.மு.க., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை


திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் காளியப்பன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனடாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த விழா துவங்குவதற்கு சற்று முன், திருநெல்வேலி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, விழாவில் கலந்து கொள்ள இருந்த துணைவேந்தர் காளியப்பனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.இதை தடுக்கச் சென்ற உடற்கல்வி இயக்குனர் தேவதாசையும் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன் பின், விழா அரங்கத்திற்கு வந்த மாலைராஜா, சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துணைவேந்தரிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, "நான் மீட்டிங்கில் இருக்கிறேன்; அப்புறம் பேசுகிறேன்' என மிகுந்த அச்சத்தோடும், பதற்றத்தோடும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

கடந்த 2008ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இலவச கலர், "டிவி' வழங்கும் நிகழ்ச்சியின் போது, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த தனி துணை கலெக்டரை, தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் சிலர் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.அரசு கேபிள் நிறுவனத்திலும், எல்காட் நிறுவனத்திலும் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். தற்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துணைவேந்தர் தாக்கப்படுகிறார்.

இச்சம்பவத்தை முதல்வரோ அல்லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வரோ கண்டிக்கவில்லை.அரசு அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலும் சரி, உரிய மரியாதையுடன் கவுரவமாக நடத்தப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. காளியப்பன், தேவதாஸ் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது போன்ற தாக்குதல் இனியும் தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் குதிக்கும். மாலைராஜா மீது உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்.

Thursday, August 5, 2010

மனிதநேய கட்சி நிர்வாகிகள் அம்மாவுடன் சந்திப்பு...


 இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்களை  அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், மனித நேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூண்ரஷீத் ஆகியோர் நேற்று அம்மாவை நேரில் சந்தித்து, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 4, 2010

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு :

 "உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார் .

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

Sunday, August 1, 2010

அ.இ.அ.தி.மு.க., நிதியுதவி

அ.இ.அ.தி.மு.கவை  சேர்ந்த இருவர் சொந்தமாக தொழில்புரிய, இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் நிதியுதவி வழங்கினார்.அ.இ. அ . தி . மு . க . , தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம்,சூரப்பள்ளம் கிராமத்தைசேர்ந்த ஆதிதிராவிடர் காலனி கிளைச் செயலர்மதியழகன் மற்றும் கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மிகவும் வறுமை நிலையில்இருப்பதாகவும், தொழில்செய்து வாழ்க்கை நடத்துவதற்கு நிதியுதவி அளிக்குமாறு புரட்சிதலைவி அம்மாவிடம் மனுக்களைஅளித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் தனது இல்லத்திற்குவரவழைத்து, மதியழகனுக்கு32 ஆயிரம்ரூபாய், சுந்தரேசனுக்கு டீகடை வைக்க 34 ஆயிரத்து 850 ரூபாயும் அம்மா அவர்கள் வழங்கினார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாத்தூரில் நாளை அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்...


"சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்து, விருதுநகர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், சாத்தூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்படுவதற்கு முன், படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என படந்தால், குருலிங்காபுரம் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்த கோரிக்கையை மைனாரிட்டி  தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை.நான்கு வழிச் சாலையைக் கடந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றுக்கு மக்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டில் நடந்த சாலை விபத்தில் மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்; 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதில், தற்காலிக ஏற்பாடாக படந்தால் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாத்தூர் அரசு பொது மருத்துவமனை மின்சாரம், படுக்கை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகிறது.

தி.மு.க., அமைச்சர், புதிதாக மருத்துவமனை கட்டப்படும் என்று சொல்லியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சாத்தூர் மக்களின் அடிப்படை தேவைகளை உடனே செய்து தர வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க., சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Saturday, July 31, 2010

குடிசைவாழ் மக்களுக்காக போராடுவோம்: அம்மா அறிவிப்பு

 "சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒன்பது கி.மீ., நீளமுள்ள இந்த சாலை 19 கி.மீ., ஆனது ஏன்? இதனால் பாதிக்கப்படும் குடிசைவாழ் மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் கிடைக்கவில்லை எனில், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும்' என்று டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னைத் துறைமுகம் - மதுரவாயலை இணைக்கும் வகையில், 9 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைக்கப் போவதாக, மைனாரிட்டி தி.மு.க., அரசு 2007ல் அறிவித்தது. தற்போது இந்த சாலை 19 கி.மீ., நீளமுள்ளதாக அமைய, அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மறு குடியமர்வுக்கான பணிகள் துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக போலீசின் உதவியோடு வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தாங்களாகவே முன்வந்து தங்கள் இடங்களைத் தருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து கையொப்பம் பெற்றுள்ளது. பெரும்பாக்கம், ஜோதியம்மாள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, அந்தப்பகுதி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர். கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. எண்ணூர் - கொட்டிவாக்கம் கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் வந்தால், மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.

குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய கல் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது தான், "ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு' திட்டத்தின் நோக்கம். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் வகையில் தொலை தூரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. குடிசைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் மைனாரிட்டி தி.மு.க., அரசிற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், குடிசை வாழ் மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Friday, July 30, 2010

திருச்சி ., ஆர்ப்பாட்டம் :14ம் தேதிக்கு திடீர் மாற்றம்.

 அ.இ.அ.தி.மு.க., சார்பில் திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 10 நாட்கள் முன்னதாக வரும் 14ம் தேதியன்றே நடைபெறுமென அறிவித்துள்ளது.இது குறித்து அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் கொள்ளை, நீராதாரம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க., சார்பில், வரும் 24ம் தேதி திருச்சியில் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.அந்த ஆர்ப்பாட்டம், 10 நாட்கள் முன்னதாக, வரும் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Thursday, July 29, 2010

ஹார்லிக்ஸ் கொள்ளைக்கு சி.பி.ஐ., விசாரணை; அம்மா கோரிக்கை

 "திருவாலயநல்லூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என டாக்டர் புரட்சிதலைவி அம்மா கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், "தனக்கு சொந்தமான சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 770 பெட்டிகளிலிருந்த 9,240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள திருவாலயநல்லூரில் கடந்த 12ம் தேதி, கொள்ளை போயிருப்பது தெரிய வந்ததாகவும், இது குறித்த புகாரை சோழவந்தான் போலீஸ் அதிகாரி வாங்க மறுத்து விட்டார்' என மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், "இரண்டு மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டது. சில நாட்கள் கழித்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடந்த சம்பவத்துக்காக  
÷ பாலீஸ்  இன்ஸ்பெக்டர் வருத்தம் தெரிவித்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
 அவற்றை பரிசீலித்த ஐகோர்ட், "இவ்வழக்கில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 17ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், 20ம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்' கருத்து தெரிவித்து இருக்கிறது. மேலும், வழக்கை திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.,க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, "விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்திற்குள், ஐகோர்ட்டில் சமர்பிக்க வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது.   இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவது தான் பொருத்தமாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி, அறவழி மீறி மக்களை துன்புறுத்தும் மைனாரிட்டி  தி.மு.க., அரசு, வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்பதை கருணாநிதிக்கு இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.