எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, September 18, 2010

பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைக்க அ.இ.அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம்

மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.இ.அதி.மு.க., சார்பில் நாளை திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, டாக்டர் புரட்ச்தலவி அம்மா  அறிவித்துள்ளார்.








அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகித்த ஜவுளித் தொழிலை முற்றிலுமாக முடக்கிய பெருமைக்குரியவர் மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர் கருணாநிதி. கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை, ஊதிய இழப்பை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நூற்பாலைகள் இயங்காத சூழ்நிலை நிலவுகிறது.மத்திய அரசின் தவறான பொருளாதார மற்றும் ஏற்றுமதி கொள்கையால், கடந்த ஓராண்டில் மட்டும் நூலின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்திக்கான செலவு 30 சதவீதம் அதிகரித்து, வங்கதேசம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.







பல பின்னலாடை தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாய சலவைப் பட்டறை தொழிற்சாலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் சென்றடையாத காரணத்தால், இதனுடைய தாக்கம் ஜவுளித் துறையை கடுமையாக பாதித்துள்ளது.அக்டோபர் 1ம் தேதி முதல் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ள செயல், "எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார் போல்' அமைந்துள்ளது என, அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.கருணாநிதிக்கு கடிதம் எழுதியும், மத்திய வர்த்தகம், ஜவுளித் துறை அமைச்சர்களை சந்தித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜவுளித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கு உறுதுணையாக இருக்கும் முதல்வர் கருணாநிதி, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.







கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து, நூல், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழில்களை உள்ளடக்கிய ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்த மைனாரிட்டி தி.மு.க., அரசு, மத்திய ஜவுளித் துறை அமைச்சரை கண்டித்தும், நூல் விலையை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடின்றி உரிய விலையில் நூல் கிடைக்கவும், ஜவுளித் தொழிலை பாதிக்காத வகையில் ஏற்றுமதிக் கொள்கையை மாற்றியமைக்கவும், சாயச் சலவை பட்டறைகளின் பிரச்னைக்கு தீர்வு காணவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், நாளை திருப்பூர் ரயில் நிலையம் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்.

No comments:

Post a Comment