எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, September 14, 2010

எடுக்க வேண்டிய சபதம் என்ன? அம்மா அறிக்கை


"மைனாரிட்டி தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா துரையின் பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும்' என,டாக்டர் புரட்சிதலைவி அம்மா  தெரிவித்துள்ளார்.







அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக தன் வாழ்நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணாதுரை. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, ஒன்றே குலம் ஒருவனே தேவன்' போன்ற அமுத மொழிகள் என்றென்றும் சாகா வரம் பெற்ற அமரத்துவமான போதனைகளாய் இன்றும் வலம் வருகின்றன. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே மறுமலர்ச்சி என்ற தலையாய நோக்கங்களை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த அண்ணாதுரை மக்களோடு மக்களாக வாழ்ந்தார். "என் கடன் பணி செய்து கிடப்பதே' என பொதுத் தொண்டில் பேரார்வம் கொண்டு உழைத்தார்.







தனது பிறந்தநாளை கூட "என்னை இச்சமூகம் மேலும் பணியாற்ற இடும் கட்டளை' என்றே அடக்கத்துடன் அறிவித்தார். அரை நூற்றாண்டு கால தனது அயராத போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியை தமிழக அரசியல் அதிகாரத்தில் இருந்தே அப்புறப்படுத்தி, திராவிட இயக்க ஆட்சிக்கு கால்கோள் நாட்டினார். அநாகரிக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட  கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே அண்ணாதுரையின் 102வது பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும். இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்

No comments:

Post a Comment