எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, September 10, 2010

மதுரையில் அக்., 18ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : அம்மா அறிவிப்பு


முல்லைப் பெரியாறு பிரச்னை, ரவுடிகள் அட்டகாசம், மின் வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகளை முன்னிறுத்தி, மைனரய் தி.மு.க., அரசை கண்டித்து, அக்டோபர் 18ம் தேதிடாக்டர் புரட்சிதலைவி அம்மா தலைமையில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடக்கிறது.







இது குறித்து அம்மாவின்  அறிக்கை: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. ரவுடிகளின் ஆதிக்கத்தால் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான மின் வெட்டு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போய் விட்டன. மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டது. மீன்பிடித் தொழில் கேள்விக் குறியாகி விட்டது. நூல் விலை காரணமாக ஜவுளித் தொழில் நலிந்து விட்டது. மக்கள் செய்வதறியாது திகைத்து போய் நின்று கொண்டிருக்கின்றனர். "பெரிய ரவுடியாகும் ஆசையில், கொலை செய்தேன்' என, ஒரு கொலையாளி போலீசாரிடம் தெரிவிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.







இப்படி, மக்களின் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் காரணமான தி.மு.க., அரசை கண்டித்து அண்மையில் எனது தலைமையில் கோவை, திருச்சி, ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. "மதுரைக்கு வராதே, வந்தால் கொலை செய்து விடுவேன்' என, தற்போது மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களுக்கு நான் பயந்தவள் இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து, வரும் அக்டோபர் 18ம் தேதி, மதியம் 2:30 மணியளவில், மதுரையில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் அம்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment