எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, August 11, 2010

கோவை, திருச்சியையடுத்து... மதுரைக்கு அம்மா , வருகை

மதுரை : கோவை, திருச்சியை அடுத்து மதுரைக்கு அடுத்த மாதம் மத்தியில்(செப்., 18-21) டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் வரவுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.,நிரந்தர  பொதுச் செயலாளர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆளுங்கட்சியின் குறைகளை பட்டியலிடுகிறார். திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து, மதுரை, நெல்லைக்கு அம்மா  செல்ல திட்டமிட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்., 18 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மைதானத்தை மாநகராட்சி வழக்க மறுத்ததையடுத்து அ.இ. அ.தி.மு.க., ஐகோர்ட்டில் மனு செய்து அனுமதி பெற்றது. இவ்வழக்கில் ஆஜரான முன்னாள் சபாநாயகரும், மூத்த வக்கீலுமான பி.எச். பாண்டியன், இக்கூட்டத்தில் அம்மா , கலந்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டார். செப்., 18 முதல் 21ம் தேதிக்குள்ளாக ஏதாவது ஒரு தேதியில் அம்மா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அ.இ.அ.தி.மு.க., தலைமை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என அ.இ.அ.தி.மு.க., வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment