எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, August 13, 2010

திருச்சியில் இன்று அம்மா தலைமையில் ஆர்பாட்டம்.


மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து திருச்சியில் அ.இ.அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் , பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்திலும், தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலியிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையிலும், புரட்சிதலைவி அம்மா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே நடந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் லக்ச்சகனக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்அம்மா  நேரடியாக கலந்து கொள்வதால் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.இந்நிலையில் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிப்பு, மணல் கொள்ளை, போலி மருந்து, போலி உணவு, போலி டாக்டர், போலி மதிப்பெண் சான்றிதழ், சட்டம், ஒழுங்கு அவல நிலை, விலைவாசி உயர்வுக்கு காரணமான மைனாரிட்டி  தி.மு.க., அரசை கண்டித்து, திருச்சியில் இன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கும் அம்மா அவர்கள் , இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான முக்கிய அறிவிப்புகளை அம்மா  வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment