எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, April 10, 2010

மைனாரிட்டி .மு.க., அரசைக் கண்டித்துஅ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


சென்னை:'மைனாரிட்டி தி.மு.க  அரசின் பட்ஜெட் மற்றும் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன' என, டாகடர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அம்மாவின் அறிக்கை:விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் மைனாரிட்டி தி.மு.க அரசின், பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அ.தி.மு.க., சார்பில்,மைனாரிட்டி  தி.மு.க., அரசின் பட்ஜெட் மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தொகுதிக்கு இரண்டு இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இக்கூட்டங்களில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.இவ்வாறு அம்மாவின்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment