எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, April 27, 2010

அ.இ.அ.தி.மு.க., தொண்டர் தீக்குளித்து சாவு: அம்மா நிதியுதவி


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் மஸ்தான்(38).அ.இ. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நேற்று பந்த் என்பதால் தனது சைக்கிள் கடையை மூடிவிட்டு காந்திரோடில் அமர்ந்திருந்தார். பகல் 1.05 மணிக்கு அம்மா வாழ்க, அம்மா வாழ்க என கத்தியபடி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மஸ்தான். மரணச் செய்தி என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment