எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, May 26, 2016

மக்களின் தீர்ப்பை ஏற்க மனமில்லாமல் தோல்வியை மூடி மறைக்க புள்ளி விவர குளறுபடிகளை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட கருணாநிதி முயற்சி இது கருணாநிதியின் பிறவிக்குணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து.

சென்னை, மே 25             
தமிழகத்தில் நடந்து முடிந்த 15வது சட்ட தேர்தலில், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழகம் வரலாற்றுச்சிறப்பு மிக் க வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக் குப்பின்னர், 2 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து அமோக
வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளார் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, புள்ளி விவரம் என்ற பெயரில், அலங்கோல கணக்குகளை அள்ளித் தெளித்து, தனது கட்சிக்கு
ஆதாயம் அளித்த கூட்டணிக்கட்சியினரையே அவமானப்படுத்தி, தனது பிறவிக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை யிலான கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக 23 4 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டது. ஆனால், தி.மு.க.வோ, பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தேர்தலில் போட்டி யிட்டது. 180 தொகுதிகளில் தி.மு.க.வும், 54 இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட
கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக
வெற்றி பெற்று, 3 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுகின்ற கட்சியே, தொடர்ந்து ஆட்சியில் அமரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment