எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, March 12, 2012

மனித உரிமைகள் மீறல் விவகாரம்: கண்டனத் தீர்மானத்தைத் தடுக்க ராஜபக்சே கடைசி நேர முயற்சி.

ஜெனீவா, மார்ச். 11
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
கொண்டுவந்துள்ள
தீர்மானத்தின் மீதான
ஓட்டெடுப்பை தடுக்க
இலங்கை அரசு கடும்
முயற்சியில் இறங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிராக
ஐ.நா. மனித உரிமை
பேரவையில் அமெரிக்கா
தீர்மானம் ஒன்றை சமர்ப்
பித்துள்ளது. இந்த தீர்மா
னத்தின் மீதான ஓட்டெ
டுப்பை தடுத்து நிறுத்தும்
வகையில் இலங்கை தூது
குழுவினர் ஜெனீவா விரை
கின்றனர். வருகிற 23&ந்
தேதி வரை ஐ.நா. மனித
உரிமை பேரவையில்
19வது கூட்டத் தொடர்
நடைபெறுகிறது. இதற்கு
முன்பாக 20ந் தேதி
இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடை
பெறும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மத்திய
அரசு ஆதரிக்க வேண்டும்
என முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள்
கடிதம் எழுதியிருந்தார்கள்.
இந்த வாக்கெடுப்பை
தடுத்து நிறுத்த இலங்கை
அரசு பகீரத முயற்சியில்
இறங்கியுள்ளது. இலங்கை
அதிபர் ராஜபக்சேவின்
விசேஷ தூதர் மஹிந்த சம
ரசிங்க ஜெனீவா விரைந்
தார். அமெரிக்காவின் தீர்
மானத்திற்கு ஏற்கெனவே
சில நாடுகள் ஆதரவு வழங்
கியுள்ள நிலையில், அனைத்து
உறுப்பு நாடுகளுடன்
இலங்கை தூது குழுவினர்
பேச்சு நடத்தவுள்ளதாக
தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment