எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, December 21, 2011

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளைச் சீராக்கி கூடுதல் தண்ணீரைத் தேக்க ரூ.130 கோடி நிதி நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், போரூர், அயனம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளை சீராக்கம் செய்து கூடுதலாக 568 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க ரூ.130 கோடி திட்டத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்த அரசு செய்திகுறிப்பு விவரம் வருமாறு:- நீர் இன்றி அமையாது உலகு என்பர் அறிஞர் பெருமக்கள். அந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக
விளங்குகிறது நீர். நமது நாட்டில் பருவமழை
சில நாட்களே பொழிவதால் பருவமழைக்
காலங்களில் கிடைக்கும் மழைநீரினை
வீணாக்காமல், நீர்நிலைகளில் தேக்கி வைப்பது
மிகவும் அவசியம் ஆகும்.
சென்னை நகரில் மக்கள் பெருக்கமும்,
அதற்கேற்றாற்போல் குடிநீர் தேவையும் அதி
கரித்து வருகிறது. சென்னை நகரின் குடிநீர்
தேவை, பருவ மழைக்காலங்களில் பெறப்படும்
மழைநீர், வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா
நதி நீர் ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டு,
சென்னையைச் சுற்றியுள்ள, பூண்டி, செங்குன்றம்,
செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில்
சேமித்து வைக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்
பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் தற்போதைய
கொள்ளளவு பருவமழை காலங்களில் பெறப்
படும் மழைநீர், வீராணம் நீர் மற்றும் கிருஷ்ணா
நீர் ஆகியவற்றை முழுமையாக சேமித்து வைக்க
முடியாத நிலை உள்ளது. இதனால் அதிகமாக
பெறப்படும் நீர் கடலுடன் கலந்து விடுகின்ற
நிலை ஏற்படுகிறது.
பெருகி வரும் நகரப் பகுதிகள் மற்றும்
மக்களின் குடிநீர் தேவைகளை முழு அளவில்
பூர்த்தி செய்ய, சென்னையைச் சுற்றியுள்ள
ஏரிகளில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க
வேண்டியது மிகவும் அவசியம் என்பதால்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான
சோழவரம், போரூர், அயனம்பாக்கம், நேமம்
ஆகிய நான்கு ஏரிகளை ஆழப்படுத்தி,
கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்க
இதன் அடிப்படையில், 50 லட்சம் ரூபாய்
செலவில் சோழவரம் ஏரியின் கொள்ளளவை
1,080 மில்லியன் கன அடியாக உயர்த்தவும்,
20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின்
தரைப் பகுதியை 1 மீட்டர் முதல் 2 மீட்டர்
வரை ஆழப்படுத்தி, இதன் கொள்ளளவை 70
மில்லியன் கன அடியாக உயர்த்தவும், 30 கோடி
ரூபாய் செலவில், அயனம்பாக்கம் ஏரியின்
கரையினை பலப்படுத்தி, கரைக்கு அருகிலுள்ள
நிலப்பரப்பினை சுமார் 2 மீட்டர் வரை ஆழப்
படுத்தி, ஏரியின் கொள்ளளவை 314 மில்லியன்
கனஅடியாக உயர்த்தவும், 79.50 கோடி ரூபாய்
செலவில், நேமம் ஏரியின் கொள்ளளவை 577
மில்லியன் கன அடி யாக உயர்த்தவும் மற்றும்
செம்பரம்பாக்கம் ஏரியினை சீராக்கம்
செய்திடவும் என மொத்தம் 130 கோடி ரூபாய்
செலவில் பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்
டுள்ளார்கள். இதன் மூலம் 568 மில்லியன்
கனஅடிதண்ணீர்கூடுதலாக சேமித்து வைக்கப்
படும்.
இந்த நடவடிக்கையின் பயனாக, மழைநீர்
வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படுவதுடன்,
பெருகி வரும் பொதுமக்களின் குடிநீர் தேவை
யினை பூர்த்தி செய்யவும் இயலும்.

No comments:

Post a Comment