எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 25, 2011

கேரளத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் கழகம் வலியுறுத்தல்

கேரளாவில் வாழும் தமிழர்கள்தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளு மன்றத்தில் கழகம் வலியுறுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணைபிரச்சினைதொடர்பாக கேரளாவில் வாழும் தமிழர்கள்தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் கழகத்தினர் குரல் எழுப்பினர். கேரளாவில் உள்ள சமூக விரோத கும் பலால் தமிழர்கள் தாக்கப்படுவதாக கழகத்தினர்தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாது காப்புஅளிக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் என்றும் கழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர்டாக்டர் மு.தம்பிதுரை. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத்தெரிவித்தார். மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் மற்றும் அக்கட்சி உறுப்பினர்களும், சமாஜ் வாதி கட்சி உறுப்பினர்களும் அவையின்மையப் பகுதிக்குச் சென்று, புதிய லோக்பால் மசோதாவில் இடம் பெற்றுள்ள சிலஅம்சங்களுக்குஎதிர்ப்புத் தெரிவித்து கண்டனக் குரல் எழுப்பினர். இதன் காரணமாகமக்களவையில் அமளி நிலவியது.

No comments:

Post a Comment