எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, December 19, 2011

கழகத்தின் சார்பில் நாளை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நடத்தும் கிறிஸ்துமஸ் பெருவிழா

சென்னை, டிச. 20
கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாளை (20-ம் தேதி) கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்துகிறார்கள். சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி விழா நடத்தும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பணடிகையையட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். வருகிற 25-ம் தேதி ஏசுபெருமான் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெல்லாம் கோலாகலத்துடன் கொண்டா டப்படவிருக்கிறது. அதையட்டி கழகப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்த உள்ளார்கள். நாளை (20.12.2011) மாலை 5 மணிக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்தும் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பால்பர் சாலையில் அமைந்துள்ள ?இறைமக்கள் புத்துணர்வு மையத்தில்? நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment