எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, December 16, 2011

அம்மாவின் திர்மானம் ஒர்ருமன்தாக நிறைவேற்றம்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை, டிச. 16-
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை
உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியாக
அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஏதுவாக கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்புச்
சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும், நீர்மட்டத்தை
152 அடியாக உயர்த்துவதற்காக அணை பாதுகாப்புப்பணிகளை மேற்கொள்ள
கேரள அரசு தமிழகத்துக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என தமிழக
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ?எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது? எனவும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது மயுடன் இருப்பதை நிலைநாட்ட 15ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பெறும் என்றும் அந்தக்கூட்டத்தில், ?முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும்பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ளஉரிமையை விட்டுக் கொடுக்காது? என்றும்அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன்தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், தமிழகமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி நேற்று காலை 11.00 மணிக்குதமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில்அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் லந்து கொண்டன.கூட்டம் தொடங்கியதும், அமைச்சர் சொ.கருப்பசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேர இடைவெளிக்குப்பின் மீண்டும் அவை கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசின் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்கள். தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய
உரை வருமாறு:-
ல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை
தொடர்பாக, கேரள அரசு அம்மாநில மக்களின்
உணர்ச்சிகளை தூண்டி வரும் சூழ்நிலையில்,
கேரள அரசின் உண்மையற்ற பிரச்சாரத்தின்
அடிப்படையில், தமிழக உரிமைகளை விட்டுக்
கொடுக்க மாட்டோம்என்பதை நாம்அனைவரும்
ஒன்றுபட்டு தெரிவிக்கும் வகையில் இன்று
(15.12.2011) இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம்
கூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல்,
மதுரை, சிவகங்கை மற்றும், ராமநாதபுரம்
மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும்
முல்லைப் பெரியாறு அணை முற்றிலும்
பாதுகாப்பான அணை என்பதை முதற்கண்
தெரிவித்துக் கொண்டு அது குறித்த சில
விவரங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
மூன்று ஒப்பந்தங்கள்
முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு
விசையின் அடிப்படையில், 1886-லிருந்து 1895
வரையிலான ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி
கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின்
அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர்
அழுத்தம்; அலைகளால் ஏற்படும் அழுத்தம்; நில
அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை
தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி
வாய்ந்தவை. எனவே தான், புவி ஈர்ப்பு
அடிப்படையில்கட்டப்பட்டமுல்லைப்பெரியாறு
அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை
மிக்கதாகவும் விளங்குகிறது.
?பெரியாறு திட்டத்தின்? கீழ், சென்னை
மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில்
திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை
மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999
ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை
உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது. ஒரு
ஏக்கர் நிலத்திற்கு, 5 ரூபாய் ஆண்டு வாடகை
என்ற அடிப்படையில், சுமார் 8,000 ஏக்கர் நிலம்
குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின்
நீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை
மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள
சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன
வசதி பெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், 29.5.1970 அன்று கேரளா
விற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு
துணைஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது,
1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை
வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான,
ஆண்டுகுத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து
30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும் மீன்பிடி
உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல்
ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும்;
2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம்
செலுத்துவதன் அடிப்படையில், புனல்
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள
தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு
ஒப்பந்தமும் ஏற்பட்டன.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886 ஆம்
ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்
படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில்
ஏற்படுத்தப்பட்டன.
இது போன்ற அணைகள் வலுப்படுத்தப்
பட்டதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உலக
அளவில்உள்ளன. 1911 ஆம் ஆண்டு, அமெரிக்கா
வில் உள்ள அரிசோனா மாநிலத்தில் கட்டப்
பட்ட ரூஸ்வெல்ட்அணைவலுப்படுத்தப்பட்டு,
அதனுடைய கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
1905 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில்
கட்டப்பட்ட ஜோக்ஸ் அணை வலுப்படுத்தப்
பட்டு 1952 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.
இதே போன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள
மேல் கிளன்டோவல் என்ற புவி ஈர்ப்பு விசை
கொண்ட அணையும் வலுப்படுத்தப்பட்டது.
இதே போன்று, முல்லைப் பெரியாறு
அணையிலும், மத்திய நீர் ஆணையத்
தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில்,
1980 முதல் 1994 வரை வலுப்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.
பழைய அணையில், அணையின் முன்
மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு
சுர்க்கி கலவையால் கருங்கற்கள், அதாவது, கொண்டு
கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல்,
அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி
திண்காரையால், அதாவது
-ஆல் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட
முல்லைப் பெரியாறு அணை, குறுகிய, நடுத்தர
மற்றும் நீண்ட கால அடிப்படையில், எவ்வாறு
வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கிக்
கூறுவது எனது கடமை என்றே கருதுகிறேன்.


No comments:

Post a Comment