எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, December 18, 2011

24-ந் தேதி கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மலரஞ்சலி

24-ஆவது ஆண்டு நினைவு நாளையட்டி, டிசம்பர் 24-ந் தேதி கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மலரஞ்சலி

சென்னை, டிச. 18-
இதயதெய்வம் ?பாரத் ரத்னா? கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ஆவது ஆண்டு நினைவுநாளையட்டி,
வருகின்ற 24-ம் தேதி அவரது நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் வளையம் வைத்து
அஞ்சலி செலுத்துகிறார்கள். இது குறித்து தலைமைக் கழக அறிவிப்பு வருமாறு:-தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 335/2011 இதய தெய்வம் ?பாரத் ரத்னா? புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 24-ஆவது ஆண்டு நினைவு நாள் 24.12.2011-சனிக்கிழமை புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் அஞ்சலி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் `பாரத் ரத்னா? புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 24-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2011 சனிக் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தலைமைக் கழகம், அனைத்திந்திய அண்ணா தி.மு. கழகம். நாள்: 17.12.2011

No comments:

Post a Comment