எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, December 22, 2011

திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு குடியரசு தினத்தன்று ரூ.3500 மதிப்புள்ள பதக்கமும் முதல்வரால் வழங்கப்படும்

திருந்திய நெல்சாகுபடி தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்து அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சமும், ரூ.3500 மதிப்புள்ள பதக்கமும்குடியரசுத்தினத்தன்று முதல்வர் அவர்களால் வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு-வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால், வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் புதிய தொழில நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள். தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல் படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, ணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில், திருந்திய நெல் சாகுபடி தொழில் பதக்கமும், குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்பரிசு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்த பட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த நடவடிக்கையினால், விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே பெருக வழிவகை ஏற்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment