எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 22, 2012

இதுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 112.3 கோடி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவிடம் 'தானே' புயல் நிவாரண நிதிக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.6 கோடி வழங்கினர்.

சென்னை, பிப். 22
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிக்கு, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், பல்வேறு துறைகள் சார்பில் 5 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 940 ரூபாய் நேரில் வழங்கினர். இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு 112 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 338 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பு வருமாறு: தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம், 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய 'தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற் கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 21.2.2012 அன்று தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

No comments:

Post a Comment