எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 9, 2012

2007ல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினரின் 3 மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது; நிலையை விளக்க அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை உரிமைக் குழு அறிக்கையின் பேரில் விஜயகாந்த் மீதான நடவடிக்கையை கருணாநிதி விமர்சிப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சட்டப்பேரவையில் அவை மரபுக்கு மாறாக
நடந்து கொண்டார் என உரிமைக் குழு அளித்த
அறிக்கையின் பேரில் விஜய காந்த் மீது எடுக்கப்
பட்ட நடவடிக்கையை அரசுடன் தொடர்பு படுத்தி
கருணாநிதி விமர்சனம் செய்திருப்பது அவரது
சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என சட்டப்
பேரவைத்தலைவர் டி.ஜெயக்குமார் கண்டித்
துள்ளார்.
2007ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. உறுப்பி
னருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல்
3 மாத சம்பளத்தை நிறுத்தி வைத்ததை சுட்டிக்
காட்டிய சட்டப்பேரவைத் தலைவர், விஜயகாந்த்
துக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தும் அவர்
அதை நிராகரித்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
கருணாநிதிக்கு மறுப்பு
தெரிவித்துசட்டப்பேரவைத்
தலைவர் டி.ஜெயக்குமார்
விடுத்துள்ள அறிக்கை
வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர்
விஜயகாந்த் மீதான அவை
உரிமை மீறல் பிரச்சினை
யில், 2-.2.-2012 அன்று சட்ட
மன்றப் பேரவை எடுத்த
நடவடிக்கை குறித்து, பத்
திரிகையாளர் கேள்விக்கு,
மு.கருணாநிதி, "ஜனநாய
கத்துக்குப் புறம்பான
காரியங்கள் மாத்திரமல்ல,
ஜனநாயகத்தை உடைத்
தெறியும் காரியங்கள், இந்த
ஆட்சியில் தொடர்ந்து
நடைபெறுகிறது. அதற்கு
ஒரு உதாரணம், விஜய
காந்த் மீது செலுத்துகின்ற
அடக்குமுறைகளும்,
அட்டூழியங்களும்." என்று
விமர்சித்துள்ளார்.
1.-2.-2012 அன்று அவை
நடவடிக்கைகளுக்குக்
குந்தகம் விளைவித்த
விஜயகாந்த்தும், கூச்ச
லிட்டு குழப்பம் விளை
வித்த தே.மு.தி.க. உறுப்பி
னர்களும்,பேரவையிலிருந்து
வெளியேற்றப்பட்டனர்.
அவையில் அனைவரின்
முன்பும், சட்டமன்றத்தி
னுடைய கண்ணியத்தைக்
குலைக்கின்ற வகையில்,
விஜயகாந்த் நடந்து
கொண்டதால், அவர் மீது
பேரவையே நடவடிக்கை
எடுக்குமாறு பேரவைத்
தலைவர் அன்றைய
தினமே கேட்டுக் கொண்டி
ருக்கலாம். எனினும்,
உடனே அவசரப்பட்டு
நடவடிக்கை எடுக்காமல்,
வெளியேற்றப்பட்ட விஜய
காந்த் தனது நிலையை
எடுத்துரைக்க வாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும்
என்பதாலும், பேரவையில்
அவர் நடந்து கொண்ட
விதம் குறித்து, பேரவை
நடவடிக்கைகளின் ஒளிப்
பதிவு மற்றும் புகைப்படங்
களைப் பார்த்து, தீர
விசாரித்து, இப்பிரச்சினை
குறித்து ஆய்ந்து அறிக்கை
அளிப்பதற்காக பேரவைத்
தலைவரால் உரிமைக் குழு
விற்கு அனுப்பி வைக்கப்
பட்டது.

No comments:

Post a Comment

seo