எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 14, 2012

முந்தைய தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் சுயநல திட்டங்கள் கொக்கு கதையை நினைவுபடுத்தி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா விளக்கம்.

திருச்சி, பிப். 14
முந்தைய தி.மு.க. அரசின் ஆட்சிக்
காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் குடும்ப
வருவாயை பெருக்கும் சுய நல
திட்டங்கள் என்று, கொக்கு கதையை
நினைவுபடுத்தி முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் விளக்கம்
அளித்து பேசினார்கள்.
13.2.2012 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
அரசு விழாவில் தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய
உரை வருமாறு:
என்னைப் பொறுத்தவரையில், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய
மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வளர்ச்சியாக
இருக்கவேண்டும். எனவே தான், எனது அரசு,
ஏழைமக்கள் உடனடியாகபயன்பெறும்வண்ணம்,
எந்தவித விலையும் கொடுக்காமல் பெறக்கூடிய
திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

No comments:

Post a Comment