எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, February 19, 2012

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு.

சென்னை, பிப். 19
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து
ஆய்வு செய்வதற்காக
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர்
குழுவினர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களை மரியாதை
நிமித்தமாக சந்தித்தனர்.
நேற்று நெல்லை சென்ற
அக்குழுவினர், மாவட்ட
ஆட்சித்தலைவருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
கடந்த 4ம் தேதி தமிழக
சட்டமன்றப் பேரவையில்
ஆளுநர் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து
பேசுகையில், கூடங்குளம்
அமின்நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி
மக்களிடையே இதுகுறித்து
தற்போது நிலவிவரும்
எண்ணங்கள் மற்றும் அச்ச
உணர்வுகள் குறித்தும்
அறிந்து, மாநில அரசுக்கு
விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசா
ல் ஒரு வல்லுநர் குழு
அமைக்க முடிவு செய்யப்பட்
டுள்ளது என்று தெரிவி
த்திருந்தார்.

No comments:

Post a Comment