எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 24, 2012

'தானே' புயல் நிவாரண நிதிக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவிடம் பல்வேறு தரப்பினர் ரூ.2.62 கோடி நிதியுதவி வழங்கினர்.

சென்னை, பிப். 24
'தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்
டங்களில் நிவாரணம் மற்றும்
மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வ
தற்காக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம் பல்வேறு தரப்பினர்
2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து
1 ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு
வருமாறு:
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களிடம், 30.12.2011 அன்று
தமிழகத்தை தாக்கிய 'தானே' புயலால்
பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களில் நிவார ணம்
மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்
வதற்காக முதலமைச்ச ரின் பொது நிவாரண
நிதிக்கு 23.2.2012 அன்று தலைமைச்
செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி
வழங்கினார்கள்.
1. கோயம்புத்தூர், லஷ்மி மிஷின் ஓர்க்ஸ்
நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
சஞ்சய் ஜெயவர்த் தனவேலு 1 கோடி
ரூபாய்.
2. மெட்ராஸ் சிமெண்ட் நிறுவனத்தின்
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
பி. ராமசுப்பிரமணிய ராஜா 1 கோடி ரூபாய்.
3. சென்னை, சமுதாய பவுண்டேஷன்
நிர்வாக அறங்காவலரும், கர்நாடக
இசைக்கலைஞருமான சுதா ரகுநாதன்
5 லட்சம் ரூபாய்..

No comments:

Post a Comment