எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி: முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி வழங்க ஏற்பாடு.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி, மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றி வருகிறார்கள். ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்கியதுடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்ப டுத்தினார்கள். விலையில்லா அரிசி, விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள், மிக்சி, கிரைண்டர், ஃபேன் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள்.
நான்காம் தமிழாக அறிவியல் தமிழைக்
கண்ட முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், மாணவ-மாணவிகளின் அறிவைப்
பெருக்க மடிக் கணினிகள் மாணவர்களுக்கு
வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 9.12
லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி
வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
மாணவர்கள் இடை நிற்றலைத் தடுக்க
சிறப்பு ஊக்கத் தொகை, பாடப் புத்தகங்கள்,
4 ஜோடி சீருடைகள், அட்லஸ், ஜாமெட்ரி
பாக்ஸ், காலணிகள் என குழந்தைகளின்
கல்விச் செலவை புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment