எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, February 18, 2012

மாநில அரசு பங்குபெறும் விதமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு கடிதம்

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய அமைச்சகங்கள் ஆணவப்
போக்குடன் செயல்படுவதாகவும், மாநிலங்களுக்கு உள்ள நியாயமான உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, மாநில அரசு பங்கு பெறும் விதமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் இறையாண்மையை நிலைநிறுத்தவும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்
டை வலுப்படுத்தவும் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் நான் உறுதுணையாக இருந்து வருகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவின்
பாதுகாப்பில் சமரசத்திற்கு இடமில்லை. இந்த
சூழ்நிலையில், வரும் மார்ச் 1ம் தேதி முதல்,
உளவுத் துறையின் கீழ் தேசிய பயங்கரவாத
தடுப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாக,
கடந்த 3ம் தேதி அலுவலக செயற்குறிப்பு
ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம்
அனுப்பியிருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன்.

No comments:

Post a Comment