எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, February 24, 2012

தமிழினத்தை வாழ வைக்க வந்துதித்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 64வது பிறந்த நாள் நலிந்தோர்களுக்கு நல உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்.

சென்னை, பிப். 24
தமிழினத்தை வாழவைக்க பூவுலகில் அவதரித்த பொன்மனத் தலைவி முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 64வது பிறந்தநாள் இன்று. முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, நலிந்தோருக்கு நல
உதவிகள் வழங்கி கழகத்தினர் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
தமிழர் தம் மானம் காத்து, தமிழகத்தின்
உரிமை காக்க குரல் கொடுத்து வரும் வீரமங்கை
வேலுநாச்சியாரின் மறு உருவமான கழகப்
பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு 63 வயது நிறைவு
பெற்று இன்று 64வது வயது பிறக்கிறது.
அதனை சிறப்பாகக் கொண்டாட கழகத்தின் அனைத்துப் பிரிவுகளும் விரிவான
ஏற்பாடுகளை செய்துள்ளன.
ஆனால், கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களோ
தனது ஆசான் புரட்சித்தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். அவர்களின் வழிநின்று அவரைப்
போலவே பிறந்தநாளன்று தன்னை யாரும்
சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
தமது பிறந்தநாள் விழாவை ஆடம்பர விழாவாக நடத்த வேண்டாம் என்றும் கழக
உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கு ஏற்ப
ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச்
செய்யுமாறும், அதுவே தனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும், தனக்கு உற்சாகத்தையளிக்கும்
என்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தான்
எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment