எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 29, 2012

மின் தடையை சமாளிக்க அரசு செலவில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: மாணவர் நலனுக்கு பாடுபடும் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவுக்கு மாணவர்கள்-ஆசிரியர்கள் - பெற்றோர்கள் நன்றி - பாராட்டு.

சென்னை, பிப். 28
மின் தடையை சமாளிக்க பள்ளிகளுக்கு அரசு செலவில் ஜெனரேட்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். வீண் ஆடம்பரம், பாராட்டு விழாக்கள், திரைப்படம் சார்ந்த விழாக்களில் பங்கு பெறு வதையும், துதிபாடிகள் மூலம் பாராட்டப்படு வதையும் தவிர கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தமிழகத்தின் நலன் கருதி எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல் படுத்தியதில்லை. பாலம் கட்டுகிறேன், நெரிசலைக் குறைக்கிறேன் என பல நூறு கோடி ரூபாய்களில் கருணாநிதி கட்டிய பாலங்கள் நெரிசலை சமாளிக்கப்பயன்பட வில்லை என்பது கண்கூடு. புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறேன். செம்மொழி பூங்கா அமைக்கிறேன், நூலகம் கட்டுகிறேன் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விரயமாக்கினார்.




No comments:

Post a Comment