எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, February 6, 2012

அரசு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிப்ரவரி 13ம் தேதி ஸ்ரீரங்கம் பயணம்: முடிவுற்ற திட்டங்களை துவக்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் தான் போட்டி
யிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு
வருகிற 13ம் தேதி பயணம் செய்யவிருக்கிறார்கள். அப்போது அரசின் பல்வேறு
நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய
மக்களுக்கு வழங்குவதுடன் புதிய
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,
முடிவுற்ற திட்டங்களை திறந்தும் வைக்
கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களை
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பெருவாரியான
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற
வைத்து, மூன்றாவது முறையாக தமிழகத்தின்
முதலமைச்சராக்கினார்கள்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்ப
தற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீரங்கம்
தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
மேற்கொண்டார்கள்.
தேர்தல் நேரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி
மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை
அப்போது நிறைவேற்றி வைக்கும் வகையில்
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டினார்கள்.
கிட்டத்தட்ட 7 மாதங்கள் நிறைவடைந்த
நிலையில் தனது சொந்த தொகுதிக்கு 2வது
முறையாக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் செல்ல உள்ளார்கள்.

No comments:

Post a Comment