எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 7, 2012

1,36,109 ஏக்கர் நிலத்தின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 3 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களிலுள்ள பூர்வீக பாசனப் பகுதிக
ளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து
109 ஏக்கர் நிலத்தின் பாசன வசதிக்காக இன்று
(7&ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பான முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் அறிக்கை
வருமாறு:
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை
அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும்
இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள
வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு
சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு
வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து
எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண்
பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று
மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மாவட்டங்களில் உள்ள பூர்வீக பாசனப்
பகுதிகளுக்கு பாசனத்திற்காக வைகை
அணையிலிருந்து 7-.2.2012 முதல் தண்ணீர்
திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் இராமந
�தபுரம் மாவட்டங்களில் உள்ள 1.36,109 ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment