எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, February 22, 2012

தேசிய கைத்தறி கண்காட்சியில் ரூபாய் 1 கோடி துணிகள் விற்பனை மக்களிடமிருந்து அமோக வரவேற்பு.

சென்னை, பிப். 22
சென்னை எழும்பூரில்
உள்ள கோ-ஆப்டெக்ஸ்
கைத்தறி கண்காட்சி
திடலில் 10.2.2012 அன்று
துவக்கப்பட்ட தேசிய
கைத்தறி கண்காட்சி 2012,
தொடர்ந்து 5.3.2012 வரை
நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில்,
காஷ்மீர் முதல் கன்னியா
குமரி வரையிலான
அனைத்து மாநில துணி
வகைகளை வாடிக்கை
யாளர்கள் பெருமளவில்
வந்து வாங்கிச் சென்றதன்
பயனாக, இதுவரை
ரூ.102.00 இலட்சம்
அளவிற்கு விற்பனையாகி
உள்ளது. இந்த கண்
காட்சி மக்களிடையே
பெருத்த வரவேற்பைப்
பெற்றுள்ளது என்பது
தெரிய வருகிறது. இக்
கண்காட்சி இனிமேல்
காலை 10.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை
நடைபெறும். இந்த
கண்காட்சிக்கு என்று
நுழைவு கட்டணம்
எதுவும் கிடையாது. இக்
க ண் க  ட் சி யி ல்
விற்பனையாகும் இரகங்
களுக்கு சிறப்பு தள்ளு
படியும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment