எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, February 14, 2012

ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற விழாவில் இரண்டாம் கட்டமாக 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் புரட்சித்தலைவி அம்மா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருச்சி, பிப். 14
ஸ்ரீரங்கம் வட்டம் நவலூர் குட்டப்பட்டு என்ற
இடத்தில் ரூ.100 கோடியில் தேசிய சட்டப்
பள்ளிக்கு அடிக்கல் நாட்டியும், ஸ்ரீரங்கம்
தொகுதியில் நடைபெற்ற விழாவில் இரண்டாம்
கட்டமாக 240 கோடி ரூபாய் மதிப்பிலான
திட்டங்கள்-நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கல்
நாட்டி வழங்கினார்கள்.
13.2.2012 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய உரை
வருமாறு:
இன்று நடைபெறும் இந்த இனிய விழாவில்,
7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட மணப்பாறை அரசு மருத்துவ
மனை கட்டடம்; பள்ளி வகுப்பறைகள்; குடிநீர்
வசதிகள்; ஆய்வகங்கள்; பிற்படுத்தப்பட்டோர்
விடுதிக் கட்டடம்; கூட்டுறவுத் துறை வங்கிக்
கட்டடம்; கிராம சந்தை மற்றும், ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம்
கட்டப்பட்ட பாலங்கள்; சமுதாயக் கூடங்கள்;
பள்ளிக் கட்டடங்கள்; சாலைகள் ஆகியவற்றை
மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து
வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

No comments:

Post a Comment