எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 23, 2012

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுவது மூன்று கட்டமாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 4385 கிராமங்களில் ஜூன் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

சென்னை, ஜன. 22
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவுப்படி,
தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும்
ஓய்வூதியம் "பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு" மூலம் தமிழகத்திலுள்ள
அனைத்து கிராமங்களிலும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக
வழங்கும் திட்டம் மூன்று கட்டமாக விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு
சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவைச் சேர்ந்த
முதியோர், மாற்றுத் திறனுடையோர்,
விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட
பெண்கள் ஆகியோரின் நலனுக்காக, தமிழக
அரசால் பல்வேறு சமூக பாதுகாப்புத்
திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு
வருகிறது. தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றவுடன்
பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ்
வழங்கப்படும் ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து
1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்கள். இந்த
ஓள்வூதியம் உரியவர்களுக்கு உரிய நேரத்தில்,
முழுதொகையும் சென்றடைவதில் உள்ளநிர்வாக
சிக்கல்களை அறிந்த தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமூகப்
பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும்
மாதாந்திர ஓய்வூதியத்தை வங்கிகள் மூலமாக
பயோமெட்ரிக் ஸ்மார்ட் அட்டையினை பயன்
படுத்தி வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை
செயல்படுத்த உத்தரவிட்டார்கள்.
இம்முன்னோடித் திட்டத்தின்படி சமூகப்
பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர
ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளிகளின்
பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்படும்.
பயனாளிகளின் அங்க அடையாளங்களை
அடிப்படையாகக் கொண்ட அட்டையை பயன்படுத்தி வங்கி சேவையாளர்
கள் மூலமாக பயனாளிகளின் கிராமத்திற்கு
நேரில் சென்றே பயனாளிகளுக்கு மாதாந்திர
ஓய்வூதியம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment