எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 2, 2012

எண்ணூரிலுள்ள அனல் மின் நிலையத்திற்கு பதிலாக ரூ.3600 கோடியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

எண்ணூரில் தற்போதுள்ள அனல்
மின் நிலையத்துக்குப் பதிலாக ரூ.3600
கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கக்கூடிய புதிய
அனனல் மின் நிலையத்தை அமைக்க
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்
தளமாக இருப்பது மின்சாரம் தான். மின்சாரம்
தங்கு தடையின்றி அனைத்து மக்களுக்கும்
கிடைப்பதற்காக தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான
அரசு பல்முனை உத்திகளை மேற்கொண்டு
வருகிறது. உற்பத்தி சார்ந்த மேலாண்மை
உத்தியாக நடந்தேறிவரும் மின் உற்பத்தி
திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய மின்
உற்பத்தி திட்டங்களை தொடங்கவும்,
மின்பகிர்வு கட்டமைப்புகளை பிரிக்கவும், மின்
இழப்பை தடுக்கும் பொருட்டு பகிர்மான
அமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய
திட்டங்களை செயல்படுத்த தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்
டுள்ளார்கள். இதன்அடிப்படையில்எண்ணூரில்
தற்போதுள்ளஅனல்மின்நிலையத்திற்கு மாற்றாக
ஒரு புதிய அனல் மின்நிலையத்தை நிறுவிட
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எண்ணூரில்
5 அலகுகள் கொண்ட, மொத்தம் 450 மெகாவாட்
திறனுள்ளஅனல்மின்நிலையம், 40ஆண்டுகளுக்கு
முன் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு
வருவதால், இங்குள்ள இயந்திரங்கள் செயலிழந்து
வருகின்றன. இதனால் இந்தஅனல்மின்நிலையம்
முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட இயல
வில்லை.எனவே, எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட
அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய மின்
உற்பத்தி இயந்திரங்களை அகற்றி விட்டு, அதே
இடத்தில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் 3600 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன தொழில்
நுட்பத்துடன் 600 மெகாவாட் திறனுள்ள ?மாற்று
எண்ணூர் அனல் மின்நிலையம்? அமைக்க
தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த புதிய எண்ணூர் அனல் மின்நிலையம்,
2015ஆம்ஆண்டுஇறுதிக்குள்செயல்பட துவங்கும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment