எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 19, 2012

கழகப்பொதுச்செயலாளர் - முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்,
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக் கழக
செயலாளர் ஜி.ராதா மரணமடைந்து
விட்டார் என்ற செய்தி கேட்டு, கழகப்
பொதுச் செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து கழகப் பொதுச்
செயலாளர் முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்களின் இரங்கல்
செய்தி வருமாறு:
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்,
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச்
செயலாளர் ஜி.ராதா மரணமடைந்து
விட்டார் என்ற செய்தி கேட்டு
வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின்
மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த
ஆரம்ப கால கழக உடன்பிறப்பு ராதா,
தாம்பரம் நகரக் கழகச் செயலாளர்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,
கழகப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும்
நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட
பல்வேறு பொறுப்புகளில் பணி
யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சகோதரர் ராதாவை இழந்து
வாடும் அவரது மனைவியும், தாம்பரம்
நகர மன்ற 33ஆவது வார்டு
உறுப்பினருமான காந்திமதிக்கும், அவரது
குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது
ஆன்மா இறைவன் திருவடி நிழலில்
அமைதி பெற எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் தமது இரங்கல் செய்தியில்
கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment