எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 22, 2012

அரசு ஊழியர்-தொழிற்சாலை பணியாளர்களின் வசதிக்காக ஜனவரி 22, 29, பிப்ரவரி 5, 12 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் நியாய விலைக் கடைகள் திறப்பு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அரசு நடவடிக்கை.

அரசுப் பணியாளர்கள், தொழிற்சாலைகளில்
பணிபுரிவோர் வசதிக்காக, ஜனவரி 22, 29
மற்றும் பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்
கிழமைகளில் நியாய விலைக்கடைகள்
திறந்திருக்கும் என்றும், அப்போது குடும்ப
அட்டைகளைப் புதுப்பித்துக்கொள்ளலாம்
என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு
2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை
புதுப்பிக்கும் பணி சனவரி மற்றும் பிப்ரவரி
2012 மாதங்களில் நடைபெற்று வருகிறது. அரசு
பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில்
பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின்
காரணமாக நியாய விலை கடைகளுக்கு
சென்று தங்களது குடும்ப அட்டைகளை பணி
நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும்,
எனவே தங்களுடைய குடும்ப அட்டைகளை
புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில்
நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து
புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு
கோரியுள்ளனர். எனவே, அரசு பணியாளர்கள்
மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும்
பணியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப
அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக,
22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய
ஞாயிற்றுக்கிழமைகளில், நியாயவிலைக்
கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைகளை
புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும்
பணியினை மேற்கொள்ள அனுமதித்தும்
அதற்கு பதிலாக 23.1.2012, 30.1.2012, 6.2.2012 மற்றும்
13.2.2012 ஆகிய தேதிகளை நியாயவிலைக் கடை
பணியாளர்களுக்கு விடுமுறை தினங்களாக
அறிவித்தும் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment