எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, January 5, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.850 கோடி ஒதுக்கீடு: எதற்கும் கவலைப்படவேண்டாம்; உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உங்கள் அரசு இருக்கிறது கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது திருக்கரங்களால் நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பயிரிழந்திருந்தாலும், படகுகளை இழந்திருந்தாலும், குடியிருந்த வீடுகளை இழந்திருந்தாலும் நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம், உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும், உங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த உங்களுடைய அரசு இருக்கிறது. தைரியமாக இருங்கள்? எனமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான 'தானே' புயல் கடந்த 30-ம் தேதி கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையைக் டந்தது. இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசியதால் பலத்த பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டது. அன்றேமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.150 கோடியை உடனடிப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்தார்கள். மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் வீதம்அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தர விட்டார்கள்.அரசுஉயர்அதிகாரிகளையும்,களத்தில் இறக்கிநிவாரணப்பணிகளைமுடுக்கிவிட்டார்கள். துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் கொடுப்பதற்காக தமிழகம் முழுவதிலிலுமிருந்து 1500 பேர் கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் அனுப்பப்பட்டுமின்இணைப்புகளைசீரமைத்துள்ளனர். குடிநீர் மற்றும் பால்விநியோகமும் சீரமைக்கப்பட்டு மக்கள் துயரங்கள் துடைத் தெறியப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் கடலூரில் 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆறுதல் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதி காரிகளுடன் லோசனை நடத்திய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேலும் ரூ.700 கோடியை ?தானே? புயல் நிவாரணத்துக்காக ஒதுக்கி உத்தரவிட்டார்கள்.

No comments:

Post a Comment