எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 9, 2012

தேசபக்தரும்-சமூகத்திற்காக ஓய்வின்றி உழைத்த சுகுமாரன் நம்பியாரின் மறைவு பேரிழப்பாகும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா இரங்கல்

உண்மையான தேச பக்தரும், சமூகத்திற்காக ஓய்வின்றி உழைத்தவருமான, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு:- பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற் குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார், மரண மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு நான் ஆழ்ந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கராத்தேயில், கருப்பு பெல்ட் பெற்றுள்ள சுகுமாரன் நம்பியார், பல்வேறு தற்காப்பு கலை களில் நிபுணராக விளங்கினார். இந்திய ராμவ வீரர்களுக்கு தற்காப்பு கலைகளில் அவர் பயிற்சியும் அளித்துள்ளார். பாரதிய ஜனதாகட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள சுகுமாரன் நம்பியார், தனது தந்தை மறைந்த எம்.என்.நம்பியாரைப் போலவே, ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அகிலஇந்தியஐயப்பசேவாசங்கத்தின்தலைவராக சுகுமாரன்நம்பியார் செயல்பட்டுள்ளார்.சுகுமாரன் நம்பியாரின் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவினால் ஓர் உண்மையான தேசபக்தரையும், மூகத்திற்காக ஓய்வின்றி உழைத்தவரையும் நாம் இழந்து விட்டோம். சுகுமாரன் நம்பியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கிக்கொள்ளும் வலிமை மற்றும் தைரியத்தை எல்லாம்வல்லஇறைவன்அன்னாரதுகுடும்பத்திற்கு அளிக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறுமுதலமைச்சர்புரட்சித்தலைவிஅம்மா அவர்கள்தமதுஇரங்கல்செய்தியில்கூறியுள்ளார்கள்.
காலமான சுகுமாரன் நம்பியாரின் உடலுக்கு
முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மாஅவர்களின்
சார்பில், நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்,
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

No comments:

Post a Comment