எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

மக்களை நாடி அரசு என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேற அனைத்துத் துறைகளிலும் மின் ஆளுமை புரட்சி ஏற்பட "மின் ஆளுமைக்கான முதலமைச்சரின் உயரிய விருதுள் ஆண்டுதோறும் வழங்கப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

மக்களை நாடி அரசு என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேறவும், அரசுத்
துறைகளை ஊக்குவித்திடவும், மின் ஆளுமை புரட்சி ஏற்பட "மின் ஆளுமைக்கான
முதலமைச்சரின் உயரிய விருது" ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் மூன்று
பிரிவின் கீழ் ரூ.30 ஆயிரம் மதிப்பில் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்றும்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு வருமாறு:
அரசு நடைமுறைகளில் புதுமையை புகுத்தி,
'அரசை தேடி மக்கள்' என்ற நிலையை மாற்றி
'மக்களை நாடி அரசு''என்ற நிலையை தகவல்
தொழில்நுட்பத்துறை மூலம் ஏற்படுத்தும்
வகையில் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தலைமையிலான அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment