எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 10, 2012

ஜவுளித் தொழிலில் அதிக முதலீடு பெறவும்; அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் அனைத்து ஜவுளிப் பூங்காக்களுக்கும் அவற்றின் திட்டத் தொகையில் 9 கோடி ரூபாய்க்கு மிகாமல் மானியம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஒப்புதல்

ஜவுளித் தொழிலில் அதிக முதலீடு பெறவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்ப டுத்தவும், தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும்அனைத்துஜவுளிப் பூங்காக்களுக்கும் அவற்றின் திட்டத் தொகையில் 9 விழுக்காடு அளவிற்கு அதாவது 9 கோடி ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:-தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது நெசவுத் தொழில் ஆகும். கைத்தறி நெசவாளர்கள் தங்களது நெசவுத் தொழிலில், உயர் தொழில்நுட்பத்தை புகுத்தி மேம்பட்ட தரத்துடன் புதிய வடிவமைப்புகளுடன் தங்களது கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்திட, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெற்றிடவும், அதிக ஊதியம் பெற்றிடவும் ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளையில், தமிழகத்தில் விசைத்தறி தொழில் மேம்படவும், அத்தொழிலை நம்பியுள்ள மக்கள் நலம் பெற்று வளமான வாழ்வு பெறவும், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலை மையிலானஅரசு உரியகவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஜவுளித் துறையின் வளர்ச்சி மற்றும் ஜவுளிக் கூடங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு, 2005ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களுக்கு மானியம் வழங்கப்படுவதால், ஜவுளித் தொழிலி ல் அதிக அளவில் முதலீடு பெறப்பட்டு, அதிக அளவு நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். இதனால் நெசவாளர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment