எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, January 25, 2012

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளியின் மறைவிற்குப் பிறகு மனைவி அல்லது கணவருக்கு மாத ஓய்வூதியம் 400 ரூபாய் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

சென்னை, ஜன. 25
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் நல
வாரியத்தில் பதிவு பெற்று, ஓய்வூதியம் பெறும்
கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால்,
கணவருக்கோ, அல்லது மனைவிக்கோ குடும்ப
ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 400
வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்
வளர்ச்சிக் காரணமாக, அமைப்பு சார்ந்த
மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின்
எண்ணிக்கை பெருகி வருகின்றது. இவர்களின்
நலனைப் பேம் வகையில் 1982ஆம் ஆண்டில் தமிழக அரசால் தமிழ்நாடு உடலுழைப்பு
தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலை-
மைகள் முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்-
டது. இச்சட்டத்தின் பிரிவு 6&ன்படி தமிழ்-
நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
தோற்றுவிக்கப்பட்டது. தொழி-லாளர்கள் நலனில்
குறிப்பாக அமைப்பு சாரா தொழிலா-ளர்கள் பணிகள்
மற்றும் வாழ்க்கைத் தரம் மேன்மை அடைவதி
ல் பெரிதும் அக்-கறைக் கொண்டுள்ள முதல
மைச்சர் புரட்சித்-தலைவி அம்மா அவர்கள்
தனது முந்தைய ஆட்சிக் காலத்-தில் அதாவது
1994ஆம் ஆண்-டில், தமிழ்நாடு உடலுழைப்பு
தொழிலாளர் (கட்டு-மானத் தொழிலாளர்கள்)
நலத் திட்டத்-தினை ஏற்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment