எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Wednesday, January 25, 2012

பாபநாசம்-பட்டுக்கோட்டை-அவிநாசி-பல்லடம்-பாப்பிரெட்டிப்பட்டியில் 8 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் புரட்சித்தலைவி அம்மா திறந்துவைத்தார்.

சென்னை, ஜன. 25
பாபநாசம், பட்டுக்கோட்டை, அவிநாசி, பல்லடம்,
பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய5 இடங்களில் 8 கோடி
ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய
அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமைச்
செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து
வைத்தார்கள்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் 24.1.2012 அன்று தலைமைச்
செயலகத்தில், ஒப்படைக்கப்பட்ட வருவாய்
மூலம் 7 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து ஊராட்சி
ஒன்றிய அலுவலகக் கட்டடங்களைக் காணொலி
காட்சி மூலம் திறந்து
வைத்தார்கள்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி
ஒன்றிய அலுவலக கட்டடங்கள் பயன்படுத்த
முடியாத அளவிற்கு மிகவும் பழுதடைந்து
உள்ளதையடுத்து, ஒப்படைக்கப்பட்ட வருவாய்
மூலம் ஐந்து ஊராட்சி ஒன்றிய
அலுவலகங்களுக்குக் கட்டடங்கள் கட்ட
தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டு,
அதன் பணிகள் தற்போது முடிவடைந் துள்ளன.

No comments:

Post a Comment