எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 22, 2012

சமூக நலத்துறை-தொழில் வணிகத் துறை அலுவலகங்களுக்கு புதிய தளவாடங்கள் வாங்க ரூ.2.46 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு.

சேப்பாக்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் சேதமடைந்த சமூக நலத்துறை
இயக்குநரகம் மற்றும் தொழில் வணிகத் துறை அலுவலகங்களுக்கு தேவையான
புதிய தளவாடங்களை வாங்க முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
ரூ. 2.46 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். தீயில் எரிந்துபோனது போன்ற கட்டடத்தை
மீண்டும் கட்ட இயலுமா என்பதை அறிய குழு ஒன்றையும் நியமித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக்
குறிப்பு வருமாறு:
சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில்
வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு
அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம்
எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த
கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான
15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில்
தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை
இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை
இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும்
பாதிப்புக்கு உள்ளாகின. இவற்றிலிருந்த பல
ஆவணங்கள், கோப்புகள், கணினிகள், மேஜை,
நாற்காலி போன்றஅனைத்துதளவாடச் சாமான்
களும் தீக்கிரையாகி உள்ளன. சமூகநலத்துறைக்கு
இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்
அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை
அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய்
அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்
பட்டுள்ளது.

No comments:

Post a Comment