எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 30, 2012

பணி சிறக்க தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.2 கோடியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர்- அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி வாங்கிக்கொள்ளலாம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அனுமதி.

சென்னை, ஜன. 30
கணினி புரட்சி மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்தே தெரிந்து
கொண்டு பணி சிறக்க சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு
நிதியான ரூ.2 கோடியிலிருந்து ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி
பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி
ஆகியவற்றை ஒரு முறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு
வருமாறு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற
உறுப்பினர்கள் மூலமேமக்களாட்சிநடைபெறுகிறது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள கணினி புரட்சியின்
மூலம் பல தகவல்களை இருந்த இடத்திலிருந்து
கணினியின் மூலம் தெரிந்துக் கொண்டு,
அவர்களின் பணி சிறக்க அவர்களுக்கு கணினி
வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
எனவே தமிழக முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் 11.08.2011 அன்று 2011-
12ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு
திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்ட
மன்றஉறுப்பினர்கள்,சட்டமன்றஉறுப்பினர்தொகுதி
மேம்பாட்டுத்திட்டநிதியிலிருந்துஒருமடிக்கணினி
வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்தார்கள்.மேலும்
நடப்பாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களின்
தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியே 75
லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக
உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு
சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்
திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத
நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்துதங்களின்
தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி
அல்லது கணினி பிரிண்டர்
மற்றும் அகண்ட அலைவரிசை
இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும்
வாங்கிக் கொள்வதற்கு தமிழக முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒப்புதல்
அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment