எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 9, 2012

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு தரமான விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை
வாய்ப்பு வழங்கும் வகையில், நடப்பாண்டிற்கான ரூ. 3.41 கோடி விலையில்லா
வேட்டி-சேலைகள் தமிழகத்திலிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிட்
டுள்ளதோடு, இதனை நெய்வதற்கு சில காலம் தேவைப்படுவதால் தகுதியுள்ள
அனைவருக்கும் விலையில்லா வேட்டி-சேலை விநியோகம் பொங்கல் பண்டிகை-
யின்-போது தொடங்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டுக்குள் வழங்கி முடிக்கவும், இத்திட்
டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கய்ள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லாவேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில்தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம்குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.1981ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் டாக்டர்எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள்கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும்நகர்புறங்களில் வாழும் ஏழை எளியமக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போதுபுத்தாடைகளை இலவசமாக வழங்கும்நோக்கத்துடனும், அகில இந்தியாவிற்கும்முன்னோடி சமூக நல திட்டமான இலவசவேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம், தமிழக அரசினால்தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டிசேலைகளை ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலி-யெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும்சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முதல்வர்புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனதுமுந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது2003ஆம் ஆண்டு ஆணையிட்டார்கள். அதன்-படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும்விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கானவிலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின்கீழ் தேவைப்படும் 170.84 இலட்சம் சேலைகள்மற்றும் 169.75 இலட்சம் வேட்டிகள் அனைத்-தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என முதலமைச்-சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி தமிழகத்தி-லுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவா-ளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள்உற்பத்தி செய்யப்படுகின்றன.பொங்கல்-2012 விலையில்லா வேட்டிசேலை திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 256கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்கெனவே ஆணை வழங்கியுள்ளார்கள். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94கோடி ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போதுஉத்தரவிட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment