எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, January 20, 2012

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 சிறப்புப் படி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பணிபுரியும் தொகுப்பூதியம் பெறும்
செவிலியர்களுக்கு மாதம்தோறும் சிறப்புப்
படியாக ரூபாய் 500 வழங்க முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தர
விட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நலமான நாடே வளமான நாடாகும். மக்கள்
நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின்அனைத்து
வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு
நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடித்
தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும்.
நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை
அனைவரும் பெற வேண்டும் என்பதன் அடிப்
படையில், தமிழகத்தில் ஏழைஎளிய மக்கள்
அனைவருக்கும் தங்கு தடையின்றி உயர்தர
மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில்
பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் புரட்சித்
தலைவி அம்மா அவர்கள் வகுத்து செயல்படுத்தி
வருகிறார்கள்.
இதன் முதல் நடவடிக்கையாக, கடந்தஆண்டு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட
மேற்படிப்பில் சிறப்பு மருத்துவம் பயின்று முடித்த
416 சிறப்பு மருத்துவர்கள், முதலமைச்சர்
புரட்சித்தலைவிஅம்மா அவர்கள்ஆணையின்படி,
2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற பணி
நியமனகலந்தாய்வின்மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டு
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்
கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்-பட்டு
மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள்.
மேலும், முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆணையின்படி, அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437
மருத்துவ அலுவலர் பணியிடங்கள் வேலை
வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன.

No comments:

Post a Comment