எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 17, 2012

இன்று 95வது பிறந்த நாள்: தலைமைக் கழகத்திலுள்ள கழக நிறுவனர் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் புரட்சித்தலைவி அம்மா மரியாதை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்கள்

கழக நிறுவனர் புரட்சித்தலைவர் டாக்டர்
எம்.ஜி.ஆர். அவர்களின் 95வது பிறந்த
நாளான இன்று (17ம்தேதி) தலைமைக்
கழகத்திலுள்ள அவரது திருவுருவச்
சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளர் முதல்வர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலர் மாலை
அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் புரட்சித்தலைவர்
பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில்
நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, கழக
நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆகியோரின் திருவுருவச் சிலைகளை திறந்து
வைத்து மாணவ- மாணவிகளுக்கு
நிதியுதவியும் வழங்குகிறார்கள்.
அளப்பரிய மனித நேயராகவும்,
அப்பழுக்கற்ற தூய தொண்டனாகவும்
தமிழகத்து மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்க
ளின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்-
நமது இதயதெய்வம் மக்கள் திலகம்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.

No comments:

Post a Comment