எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Sunday, January 1, 2012

தானே? புயலால் உயிரிழந்த 9 பேர்களது குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

தானே? புயலால் உயிரிழந்த 9 பேர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூபாய் 18 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.இது குறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:- தமிழகத்தை தாக்கிய ?தானே? புயலின் காரணமாக 31.12.2011 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேரும், மழை காரமணாக ஒருவரும், கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேரும்; மழை காரணமாக ஒருவரும்; தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு வரும் ஆக மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். ?தானே? புயல் மற்றும் மழை காரணமாக மரணமடைந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment